ரஷ்யாவில் இருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்க பின்லாந்து எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையை தடுக்க, ரஷ்யாவுடனான அதன் எல்லையில் உள்ள ஒன்பது குறுக்கு முனைகளில் நான்கை சனிக்கிழமை மூடும் என்று பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஓர்போ தெரிவித்துள்ளார். பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு, அமெரிக்காவுடனான பின்லாந்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு ரஷ்யாவின் பழிவாங்கலாகத் தோன்றுகிறது என்று பின்லாந்தின் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நேட்டோ கூட்டணியில் இணைந்த ஐரோப்பிய ஒன்றிய நாடான பின்லாந்து, ரஷ்யாவுடன் 1,340-கிமீ (833-மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது, […]













