ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கப்பட்ட நிதியை மீட்கும் பாதையில் ஹங்கேரி
ஐரோப்பிய ஒன்றியத்தின் 10 பில்லியன் யூரோ நிதியை பெற தேவையான அனைத்து நிபந்தனைகளையும் ஹங்கேரி நிறைவேற்றும் பாதையில் உள்ளதாக யூரோநியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹங்கேரியின் புதிய பிரதமரான பீட்டர் மாக்யார் Péter Magyar ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கப்பட்ட நிதியை பெற போராடி வருகின்ற நிலையில் அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் மாத இறுதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் அந்த நிதியை பெற பீட்டர் மாக்யார் Péter Magyar தலைமையிலான அரசாங்கம் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் பாதையில் உள்ளதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
€16.4 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய நிதிகளை விடுவிக்க பீட்டர் மாக்யார் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு இடையில் இனக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் முதல் தொகுப்பாக பத்து பில்லியனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்யார் அரசாங்கம் மீதமுள்ள நிதிதொடர்பான துல்லியமான விவரங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




