இந்தியா

வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் எவ்வாறான சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் : அனைவரும் அறிந்திருக்க வேண்டியவை!

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்குமே,விபத்து காப்பீட்டு திட்டம், உயிரிழப்பு காப்பீட்டு திட்டம் என்பன உள்ளது எனவும், அவற்றை மக்கள் சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும், பொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த தமிழ் கிருஷ்ணசாமி என்பவர் இன்று (16.11)  கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்ததில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  பொதுமக்களுக்கு பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்து வருகின்றது, குறிப்பாக இன்றைய தினம் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், போன் பே, ஜிபே, உள்ளிட்ட செயலிகளை தினமும் பயண்படுத்தும் நிலையில் இருக்கிறோம்.

இவ்வாறான செயலிகளை பயன்படுத்த முக்கிய காரணியாக வங்கி உள்ளது, வங்கியில் கணக்கு வைக்காமல் இந்த செயலிகளை பயண்படுத்த முடியாத நிலை உள்ளது, எனவே நாம் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருக்கிறோம், இது ஒரு புறம் இருக்க வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே வங்கி சார்பாக வாகன விபத்துகாப்பீடு மற்றும் உயிரிழப்பு காப்பீடு திட்டம் உள்ளது.

இதனை பற்றி யாருக்கும் பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை, ஏன் வங்கி மேலாளர்களுக்கே இது சம்மந்தமாக எந்த தகவலும் இல்லை ஆனால் தனக்கு விபத்து ஏற்பட்டு, பல லட்சம் செலவு செய்து பின்  வங்கியில் இது குறித்து விண்ணப்பித்ததாகவும், என்னுடைய மனுவை சரியாக புரிந்து கொள்ளாமல் வங்கி நிர்வாகம் தன்னை அலைக்கழித்த நிலையில் ஆர்பிஐ அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன், தற்போது வங்கி நிர்வாகம் தங்களது தவறை புரிந்து கொண்டதாகவும், தனக்கு இழப்பீடு தொகை வழங்குவதாகவும், முறையாக நீதிமன்றம் மூலமாக அனுகி அதை பெற்று கொள்ளலாம் என்று கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே இது மாதிரியான  உண்மைகளை பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இன்றைய தினம் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content