உலகம் செய்தி

ஈரான் மக்களுக்கு சுதந்திரம் – ட்ரம்ப் அறிவிப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

ஈரானில் ‘சுதந்திரம்’ தான் தனது முக்கிய குறிக்கோள் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல் குறித்து வொஷிங்டன் போஸ்ட்டிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஈரான் “பாதுகாப்பான” இடமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறிய அவர், எனக்கு ஒரு பாதுகாப்பான தேசம் வேண்டும், அதுதான் நமக்கு இருக்கப் போகிறது.” எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று காலை முதல் ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி (BREAKING NEWS) […]

இந்தியா செய்தி

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழப்பு

  • February 28, 2026
  • 0 Comments

இந்தியாவின் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சூர்யஸ்ரீ என்ற பெயரில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துள்ளன மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்குண்டு படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பா செய்தி

போர் பதற்றங்களுக்கு மத்தியில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பிரதமர் ஸ்டார்மர்

  • February 28, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் நிலையில், பிரதமர் ஸ்டார்மர் (Starmer) அவசர கோப்ரா(COBRA) குழுக் கூட்டத்தை நடத்தினார். சனிக்கிழமை காலை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டன. தெஹ்ரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தி இது முன்கூட்டிய தாக்குதல் நடவடிக்கை என இரு நாடுகளும் விளக்கம் அளித்தன. இதற்கு பதிலாக, ஈரான் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கின் பல பகுதிகள் ஏவுகணைகளால் இலக்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உலகம் செய்தி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் – மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்

  • February 28, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதை அமெரிக்க, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். மிகப்பெரிய போர் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். இதேவேளை ஈரான் பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதென இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. ட்ரம்ப், ஈரானிய அரசாங்கத்தை கையகப்படுத்த முயற்சி செய்துள்ளார் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்காக ஈரானிய மக்களுக்கு இப்பொழுது செயற்படுங்கள் என அவர் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈரானில், ஐந்து நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவுததம் […]

இலங்கை உலகம்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்

  • February 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து […]

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக வடக்கு, கிழக்கில் போராட்டம்!

  • February 28, 2026
  • 0 Comments

“பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” எனும் முழக்கத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ‘தாயக செயலணி’ அமைப்பின் ஏற்பாட்டில் இந்த எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அங்கிருந்து பேரணியாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்பினர், கல்விச் சமூகத்தினர் […]

இலங்கை செய்தி

கச்சத்தீவு திருவிழா நிறைவு: 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!

  • February 28, 2026
  • 0 Comments

  வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்று (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று (28) நிறைவடைந்தது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளால் திருவிழாக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கொடியேற்றத்தைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றன. அத்துடன், யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்குபற்றலுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. […]

செய்தி

யாழ்.நகரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: நீதவான் வழங்கியுள்ள உத்தரவு!

  • February 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ் . நீதவான் லெனின்குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார். அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6- 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கருவினை கடதாசி பெட்டியால் […]

இந்தியா தமிழ்நாடு

பா.ஜ.கவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது: வைகோ திட்டவட்டம்!

  • February 28, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ம.தி.மு.க. தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்று MDMK அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ Vaiko தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வருடன் இன்று (28) நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். “ தமிழக முதல்வரிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு சாதகமான பதில் கிடைக்கப்பெற்றது. தொகுதிப் பங்கீடு பற்றி முதல்வரிடம் எதுவும் பேசவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து ம.தி.மு.க. குழு முதற ;சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மீண்டும் […]

செய்தி

காதலுக்கு போர்க்கொடி: துணி வியாபாரி ஆணவக்கொலை! ஆந்திராவில் பயங்கரம்!!

  • February 28, 2026
  • 0 Comments

காதல் திருமணம் செய்த துணி வியாபாரி கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியா, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபர்களை மக்கள் நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆந்திர மாநிலம் அம்பேத்கார் கோனசீமா மாவட்டம் வேம்பள்ளியை சேர்ந்தவரான 41 வயதான சூரிய பிர காஷ் துணி வியாபாரம் செய்பவர். மேடபாடு கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, ராயவரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரே பாடசாலையில் பயின்றுள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் காதலித்து வந்தனர். இந்த […]