இலங்கை

ICC யின் தலைவரை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சஜித் கோரிக்கை!

  • November 27, 2023
  • 0 Comments

இலங்கைக்கு வரவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவரை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தின் இன்றைய (27.11) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் கிரெக் பார்க்லே அங்குள்ள 225 எம்.பி.க்களையும் சந்திக்க முடியும் எனவும், இந்த நாட்டில் நிலவும் கிரிக்கெட் பிரச்சனை குறித்து தமக்கு தெரிவிக்க சந்தர்ப்பம் கிடைக்கும் […]

இலங்கை

இலங்கை – இரத்தினபுரி சிறுவர் இல்லத்தில் 20 சிறுமிகள் துஷ்பிரயோகம்: கீதா குமாரசிங்க

இரத்தினபுரியிலுள்ள சிறுவர் இல்லமொன்றின் வார்டன் ஒருவரின் கணவர், பராமரிப்பில் இருக்கும் 20 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் மேலும் நான்கு குழந்தைகளின் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன, கடந்த மாதத்தில் இருந்து மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.    

இலங்கை

இலங்கையில் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • November 27, 2023
  • 0 Comments

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 1,300 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,256 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டாக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். அவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள்  கொழும்பு மாவட்டத்தில் 256 பேர் பதிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் 138 நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 130 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 92 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவாகிய தொழுநோயாளிகளில் 14 வயதுக்குட்பட்ட 131 […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 39 பலஸ்தீன கைதிகள் விடுவிப்பு!

  • November 27, 2023
  • 0 Comments

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே அறிவிக்கப்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்திற்கு இணையாக இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 39 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பணயக்கைதிகள் பரிமாற்றத்தின் மூன்றாம் நாளில் இந்த பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 13 இஸ்ரேலிய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ததன் எதிரொலியாகவே இந்த குழு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை, நேற்று (26.11) ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதிகள் குழு தற்போது இஸ்ரேலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நான்கு நாள் […]

இலங்கை

இலங்கையில் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள் காலாவதியாகியுள்ளன!

  • November 27, 2023
  • 0 Comments

கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக அரச மருந்து ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 10,736 மில்லியன் ரூபா பெறுமதியான 7,951,710 டோஸ் பைசர் தடுப்பூசி காலாவதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அறிக்கையின்படி குறித்த தடுப்பூசி கையிருப்பு 2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் பதிவு செய்யப்படாத […]

வட அமெரிக்கா

கனடாவில் துப்பாக்கிச்சூடு : மூவர் உயிரிழப்பு!

  • November 27, 2023
  • 0 Comments

கனடாவின் மனிடோபாவில் உள்ள வின்னிபெக்கில் நேற்று (27.11) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன்,  இருவர் காயமடைந்தனர் என்று சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் மல்டி-சூட் குடியிருப்பில் நடந்துள்ளது. தாக்குதலுக்கானை காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.  மேலும் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில நினைவேந்தலுக்கு தடைக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கு முறியடிப்பு!

  • November 27, 2023
  • 0 Comments

நினைவேந்தலுக்கு தடை கோரி ஊர்காவற்துறை நீதிமன்றத்திலே பொலிஸார் கடைசி நேரத்திலே தாக்கல் செய்த வழக்கை முறியடித்திருக்கிறோம் என சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கில் ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நினைவேந்துகின்ற உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை தாக்கல் செய்த பொலிசார், நாங்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தை நினைவு கோரப்போவதாகவும், தடை செய்யப்பட்ட சிவப்பு மஞ்சள் நிறங்களை நாங்கள் பயன்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தார்கள். அவர்களுடைய வாதங்களை நாங்கள் […]

இலங்கை

வெலே சுதாவுக்கு சுகவீனம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழுப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

  • November 27, 2023
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலின் தலைவருமான ‘வெலேசுதா’ என அழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்தகுமாரவை உடனடியாக புஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை செய்து, நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இன்று (27) உத்தரவிட்டுள்ளார். அவர் உடல் நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதா என பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெலேசுதா என அழைக்கப்படும் சமந்தகுமார, அவரது மனைவி கயானி பிரியதர்ஷனி மற்றும் உறவினர் வசந்தி வசுந்தரா ஆகியோருக்கு […]

பொழுதுபோக்கு

இது அதுல?? பீஸ்ட் படத்தை கிண்டல் செய்ததற்கு நெல்சனிடம் மன்னிப்பு கேட்கும் ரசிகர்கள்… காரணம் தெரியுமா?

  • November 27, 2023
  • 0 Comments

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என தயாரிப்பாளர் கூறியிருந்தார்கள். சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் க்ளைமாக்ஸில் ஜெட்டில் போகும்போது மாஸ்கை கழட்டிவிட்டு வணக்கம் வைக்கும் காட்சியை வைத்து இயக்குநர் நெல்சனை கிண்டல் செய்து வந்தனர். யாருமே இல்லாத […]

இலங்கை

வடக்கு, கிழக்கில் தடைகளைத் தாண்டி நினைவேந்தலுக்கு ஏற்பாடு

  • November 27, 2023
  • 0 Comments

வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் காணப்படுகின்ற துயிலுமில்லங்களில் மாவீரர்களை நினைவேந்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் நிறைவடைந்துள்ளது. தடைகளைத் தாண்டி இன்றையதினம் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். அதற்கு அமைவாக, யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் துப்புரவுப்பணிகள் நிறைவடைந்து நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன. இதனைவிடவும், நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக, மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு […]