இலங்கை

வெலே சுதாவுக்கு சுகவீனம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழுப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பலின் தலைவருமான ‘வெலேசுதா’ என அழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்தகுமாரவை உடனடியாக புஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை செய்து, நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.

அவர் உடல் நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதா என பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வெலேசுதா என அழைக்கப்படும் சமந்தகுமார, அவரது மனைவி கயானி பிரியதர்ஷனி மற்றும் உறவினர் வசந்தி வசுந்தரா ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், வெலசுதாவுக்கு உடல் நலக்குறைவால் இருப்பதால் நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலையில் இன்று ஏற்பட்டுள்ளதாக புஸ்ஸ சிறைச்சாலை அத்தியட்சகர் தொலைநகல் மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அதனால் இந்த விடயங்களை கருத்திற்கொண்டே மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.மேலும் சாட்சி விசாரணையை ஜனவரி 24 ஆம் திகதிக்கு அழைப்பதாக நீதிபதி உத்தரவிடப்பட்டது.

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலின் வருமானத்தில் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான காணி மற்றும் வீடுகளை கையகப்படுத்தி பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை இழைத்ததாக குற்றம் சுமத்தி வெலேசுதா உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content