பொழுதுபோக்கு

ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா குறித்து வெளியான அதிர்ச்சி செய்தி

  • December 17, 2023
  • 0 Comments

நடிகை சங்கீதா சின்னத்திரையில் இப்போது பிஸியாக நடித்துவரும் பிரபலம். 45 வயதாகும் சங்கீதா மராத்திய மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பின் ஹிந்தி படங்களில் நடித்தவர் பின் தமிழில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவருக்கும் பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் கடந்த டிசம்பர் 10ம் தேதி மைசூரில் திருமணம் நடந்தது. இந்த நிலையில் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் களைகட்டியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

  • December 17, 2023
  • 0 Comments

ரஷ்ய போர் மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தலைநகர் மொஸ்கோவில் அமைந்துள்ள செஞ்சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் ஏராளமான கடைகள், பொழுது போக்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் 2024-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் பெரிய கட் அவுட் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. புத்தாடை, கேக் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் பொருட்கள் வாங்க வருவோர், சிறிது நேரம் ஐஸ் ஸ்கேட்டிங் செய்து மகிழ்ந்தனர். இதனிடையே, ரஷ்யாவில் பரவலாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகளையும், வீடுகள்கு வெளியே நிறுத்தப்பட்ட […]

பொழுதுபோக்கு

பிக்பாஸில் இருந்து வெளியேறினார் கூல் சுரேஷ்… வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • December 17, 2023
  • 0 Comments

தமிழ் சின்னத்திரையில் இதுவரை நடந்த சீசன்களில் ஒரு 50 நாட்கள் மேலே சென்றாலே வைனல் போட்டியாளராக யார் வருவார் என்ற கணிப்புக்கு மக்கள் வ்ந்துவிடுவார்கள். ஆனால் இந்த 7வது சீசன் அப்படி இல்லை, யார் வெற்றியாளராக வருவார் என்பதை யூகிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு போட்டியாளர் வித்தியாசமாக காணப்படுகிறார், இதனால் மக்கள் பயங்கர குழப்பத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் தான் Mid Week எவிக்ஷன், வார இறுதி எவிக்ஷன் போன்றவையும் நடக்கிறது. அப்படி அனன்யா கடைசியாக […]

இலங்கை

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகமாக மாறும் இலங்கை

  • December 17, 2023
  • 0 Comments

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானமொன்றை எட்டியுள்ளன. மொரிஷியஸில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாட்டில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதுடன், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொழும்பு பாதுகாப்பு அறிக்கையும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது. இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் கடல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, மேற்படி பிரேரணையை முன்வைத்துள்ளதுடன், மாநாடு அதற்கு […]

உலகம் முக்கிய செய்திகள்

உலகின் பல நாடுகளை அச்சுறுதுத்தும் பனிப்பொழிவு! கடுமையாக பாதிக்கப்பட்ட ரஷ்யா – சீனா

  • December 17, 2023
  • 0 Comments

உலகின் பல நாடுகளை பனிப்பொழிவு அச்சுறுதுத்தும் நிலையில் ரஷ்யா மற்றும் சீனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாட்களில் சீனாவில் கடுமையான குளிரான காலநிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல பகுதிகளில் வீதிகளில் பனிக்கட்டிகள் குவிந்ததால் வாகனங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து, பல மாகாணங்களில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை அதிகாரிகள் கட்டுப்படுத்தினர். இதற்கிடையில், ரஷ்யா முழுவதும் கடுமையான பனிப்புயல் வீசியது, பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரஷ்யாவில் மிகப்பெரிய பனிப்பொழிவைப் பெற்றுள்ளது. மொஸ்கோவில் உள்ள சாலைகள் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான அடர்த்தியான […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Chrome-ல் பாதுகாப்பை அதிகப்படுத்தும் கூகுள்.!

  • December 17, 2023
  • 0 Comments

கூகுள் நிறுவனம் (Google) அதன் தயாரிப்புகளில் ஒன்றான குரோம் பிரௌசரில் (Chrome) ‘டிராக்கிங் ப்ரொடெக்ஷன்’ (Tracking Protection) என்கிற பாதுகாப்பு அம்சத்தை சோதிக்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் சோதனை செய்யப்படவுள்ள இந்த அம்சம் முதலில் உலகளவில் ஒரு சதவீத குரோம் பயனர்களுக்கு கிடைக்கும். இந்த டிராக்கிங் ப்ரொடெக்ஷன் அம்சம் என்பது மூன்றாம் தரப்பு குக்கீகளை (Third-party cookies) முடக்குவதற்கான கூகுள் முயற்சியின் ஒரு பகுதியாகும். மூன்றாம் தரப்பு குக்கீகள் என்பது உங்கள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் மேற்கொள்ள தயாராகும் 3 லட்சம் மக்கள்

  • December 17, 2023
  • 0 Comments

ஜெர்மன் நாட்டுக்கு 3 லட்சம் பேர் அகதி விண்ணப்பம் மேற்கொள்வார் என்று ஒரு புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதிக்குள் மொத்தமாக 3 லட்சம் பேர் அகதி விண்ணப்பம் மேற்கொள்வார்கள் என கூறப்படுகின்றது. இந்நிலையில் ஜெர்மனியின் உள் ஊர் ஆட்சி அமைச்சர் நான்சி வேசர் அவர்கள் 16.10.2023 ஆம் ஆண்டு ஜெர்மனியின் எல்லை சோதனைகளை முடக்கியுள்ளார். இந்த எல்லை சோதனைகள் முடக்கிவிடப்பட்டதன் காரணமாக சட்டவிரோத குடியேற்றவாசிகளுடைய குடியேற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது கடந்த நவம்பர் மாதம் […]

இலங்கை

இலங்கை முழுவதும் அதிரடி நடவடிக்கை – சுற்றி வளைக்க தயாராகும் பொலிஸார்

  • December 17, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வலையமைப்புகளை ஒடுக்கும் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் கோட்டாஸின் 373 சமூக பொலிஸ் குழுக்களின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் வகையில் அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற செயலமர்வில் அனைத்து பொலிஸ் நிலையங்களையும் தொடர்பு கொண்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். இந்த விசேட நடவடிக்கையில், […]

இலங்கை செய்தி

யூதர்களை போல் வளர்ச்சியடைந்தால் இலங்கையை ஆளமுடியும் – இராஜாங்க அமைச்சர்

  • December 16, 2023
  • 0 Comments

யூதர்களைப்போன்று கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளரும்போது இலங்கையினையே நாங்கள் ஆட்சிசெய்யமுடியும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.   இன்று உலகளவில் சிறு பிரிவினராகயிருந்து உலகத்தினையே ஆட்டிப்படைக்கும் நிலைமையினை யூதர்கள் கொண்டதற்கு காரணம் அவர்களின் பொருளாதாரமும் கல்வியும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரில் உயர்தர மாணவர்களுக்கான வர்த்தக பிரிவு கற்கைநெறியினை ஆரம்பித்து வகுப்பறையினையும் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் எம்.பற்றிக் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அதிதியாக இராஜாங்க அமைச்சர் […]

இலங்கை செய்தி

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இலகுபடுத்தப்படும் – கல்வி அமைச்சு

  • December 16, 2023
  • 0 Comments

பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் இலகுபடுத்தப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சையில் எழுத்தறிவு மற்றும் எண்ணிக்கையை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். எதிர்காலத்தில் புலமைப்பரிசில் சித்திகளைப் போன்று 4ஆம் மற்றும் 5ஆம் தர வகுப்பறையில் முப்பது வீதமான புள்ளிகளைப் பெற வேண்டும் எனவும், அதற்காக பிள்ளைகள் தொடர்ச்சியாக பாடசாலைக்குச் செல்வது அவசியம் எனவும் திரு.பிரேமஜயந்த குறிப்பிட்டார். […]