இலங்கை

மன்னார் பிரதேசத்தில் 18 ஆயிரம் போதை வில்லைகளுடன் இருவர் கைது

  • December 20, 2023
  • 0 Comments

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதை வில்லைகளுடன் இருவர் புதன்கிழமை (20) காலை மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18, ஆயிரம் போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் தோட்டவெளி , தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது . கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளின் பெறுமதி 21 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.அத்துடன் போதை […]

கருத்து & பகுப்பாய்வு

சரியும் பைடனின் புகழ், ட்ரம்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடை : அமெரிக்க மக்களின் நிலைப்பாடு என்ன?

  • December 20, 2023
  • 0 Comments

ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க கேபிடல் கட்டிடத்திற்குள் நுழைய ஆதரவாளர்களைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2024 ஜனாதிபதித் தேர்தலில் கொலராடோ பிரைமரியில் வாக்களிக்க தகுதியற்றவர் என்று மாநில உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  . கொலராடோ சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகள் குழு 04 முதல் 03 என முடிவெடுத்துள்ளது, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வரலாற்றில் இத்தகைய முடிவை வழங்கிய முதல் ஜனாதிபதி வேட்பாளர் ஆவார். இருப்பினும், 2024 […]

ஐரோப்பா

பெர்லினில் மீண்டும் தேர்தல் நடத்த ஜெர்மனி உச்ச நீதிமன்றம் உத்தரவு

தலைநகரில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் கடுமையான குளறுபடிகள் இருப்பதால், 2021 தேசியத் தேர்தலை பகுதியளவு மீண்டும் பெர்லினில் நடத்த ஜெர்மனியின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்.டுள்ளது. ஃபெடரல் அரசியலமைப்பு நீதிமன்றம், நகரத்தில் உள்ள 2,256 வட்டாரங்களில் 455 இடங்களில் தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும் ஜெர்மனியின் அடுத்த தேசிய தேர்தல் 2025 இலையுதிர்காலத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

கிறிஸ்மஸ் மரம் போன்ற தோற்றத்தில் ஒளிர்ந்த நட்சத்திரக்கூட்டம் – நாசா வெளியிட்ட ஆச்சரிய புகைப்படம்!(வீடியோ)

  • December 20, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ள நிலையில், கிறிஸ்துமஸ் மரம் போன்ற தோற்றத்தைக் கொண்ட நட்சத்திரக்கூட்டங்களின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிசம்பர் 25ல் உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் கொண்டாடப்படவுள்ள நிலையில் நாசா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. பூமியில் இருந்து சுமார் 2,500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் கிறிஸ்மஸ் மரம் போன்ற வடிவில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் […]

இந்தியா

கர்நாடகாவில் குடி போதையில் மனைவியின் கன்னத்தை கடித்து துப்பிய கணவன்!

  • December 20, 2023
  • 0 Comments

குடிபோதையில் மனைவியின் கண் இமை மற்றும் கன்னச் சதையை கடித்து துப்பிய கணவர், தடுக்க வந்த மகளையும் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெல்தங்கடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவைச் சேர்ந்தவர் சுரேஷ் கவுடா. மது பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ் கவுடா அடிக்கடி குடித்து விட்டு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்வார் என்று தெரிகிறது. இந்த நிலையில், நேற்று குடிபோதையில் வந்த சுரேஷ் கவுடா, மனைவி, மகளைத் தாக்கினார். அப்போது திடீரென […]

இலங்கை

மட்டக்களப்பில் மாவீரர் தினத்தன்று கைது செய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுவிப்பு

  • December 20, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த மாவீரர் தினத்தன்று அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்ட நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் உட்பட நான்கு பேர் இன்று பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று முடிந்த நிலையில் அங்கு ஒங்கமைப்பில் ஈடுபட்டிருந்த நிதர்சன் மற்றும் மாணவனான வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரம் பயிலும் நியுட்டன் […]

இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்திற்கு அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டவர்களால் பரபரப்பு!

  • December 20, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நபரொருவர் அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டமை சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவின் சில திரைப்படங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் திரையிடப்படுகிறது. இந்நிலையில் அரைக் காற்சட்டையுடன் வந்த ஒருவர் திரைப்படத்தை பார்வையிட பல்கலைக்கழகத்திற்கு உள்ளே அனுமதிக்குமாறு கோரவே பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை மறுத்து அரைக் காற்சட்டையுடன் நுழைய முடியாது என பல்கலைக்கழக நடைமுறையை கூறினர். இதன்போது அரைக் காற்சட்டையுடன் வந்தவருடன் உடனிருந்த சிலர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் […]

இலங்கை

யாழில் பெய்துவரும் மழை யினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 435 குடும்பங்களைச் சேர்ந்த 1523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சங்கானை பிரதேச செயலக பிரிவில் 214 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 485 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் […]

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டு வரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன. நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், காலபோக பயிர்ச் செய்கை, துறை சார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இதனைவிட நெற்செய்கையில் வெண்முதுகு தத்தி […]

இலங்கை

முல்லைத்தீவில் படிபடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்!

  • December 20, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மழை சற்று குறைவாக காணப்படுகின்ற நிலைமையில் வெள்ள நீர் வடிந்தோடி வருகின்றதனால் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு சென்று வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையிலே ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் புளியங்குளம் பண்டாரவன்னி கூழாமுறிப்பு பேராறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்த மக்கள் நேற்று […]