ஐரோப்பா

ரஷ்ய தாக்குதல்களில் நான்கு பொதுமக்கள் உயிரிழப்பு

கெர்சனில் ரஷ்ய தாக்குதல்களில் நான்கு பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒன்பது பேர் காயமடைந்தனர். “ரஷ்ய இராணுவம் பிராந்தியத்தின் மக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவ நிறுவனங்கள், ஒரு கல்வி நிறுவனம் மற்றும் கெர்சனில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பு பொருட்களை குறிவைத்தது,” என்று உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துளளார்.

விளையாட்டு

இந்திய அணியுடன் மீண்டும் இணைந்த விராட்

  • December 24, 2023
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரு அணிகள் மோதும் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கிடையே இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் வீராட்கோலி, தனிப்பட்ட குடும்ப விஷயம் காரணமாக தாயகம் திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வீராட்கோலி, தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய அணியுடன் மீண்டும் இணைந்தார். […]

உலகம்

5000 ஆண்டுகள் பழமையான மம்மி உடல் மலைகளில் கண்டெடுப்பு

எகிப்தின் வரலாறு மிகவும் பழமையானது, இன்றும் கூட சிந்திக்க முடியாத பல மர்மங்கள் உள்ளன. எகிப்து மர்மங்களின் பொக்கிஷம் என்று அழைக்கப்படுகின்றது. பெரும்பாலும் மம்மிகள் அங்கு அகழ்வாராய்ச்சியின் போது கண்டுப்பிடிக்கப்படுகின்றது ஒரு மம்மி தன்னுடன் பல ரகசியங்களை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.ஆனால் எகிப்தில் மட்டுமல்ல, மலைகளிலும் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், செப்டம்பர் 19, 1991 அன்று, ஆஸ்திரியா மற்றும் இத்தாலி இடையே பரவிய ஆல்ப்ஸ் மலைகளில் ஒரு மம்மி கண்டுபிடிக்கப்பட்டது, சமூக வலைதளத்தில் வைரலான […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் சடுதியாக அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

  • December 24, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய மதியம் வரையான நிலவரப்படி 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரித்த அளவில் டெங்கு நோயாளிகள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட்டு டெங்கு காய்ச்சல் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு சுகாதார […]

உலகம்

போர் மிகவும் கடுமையானது : தொடர்ந்து போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை -பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேலின் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுடனான போரில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், காஸாவில் போர் “மிகக் கடுமையான விலை” என்று கூறியுள்ளார். “காசாவில் மிகவும் கடினமான நாளுக்குப் பிறகு இது ஒரு கடினமான காலை நேரம்… போர் மிகவும் கடுமையான விலையை நிர்ணயிக்கிறது… ஆனால் தொடர்ந்து போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை முதல் பாலஸ்தீனப் பகுதியில் 14 வீரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் […]

இலங்கை

இலங்கையில் 1004 பேர் பொது மன்னிப்பில் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவர். சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை அறிவித்தார். பல்லேகல சிறைச்சாலையில் இருந்து 162 பேரும், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 42 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 47 பேரும் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து 12 பேரும், வவுனியா சிறைச்சாலையில் இருந்து 25 பேரும், யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 16 […]

வட அமெரிக்கா

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து… 10 குழந்தைகள் உட்பட 19 பேர் பலியான சோகம்!

  • December 24, 2023
  • 0 Comments

நிகரகுவாவில் இன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவா நாட்டில், 70 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து அங்குள்ள ரன்கோ கிரண்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அங்குள்ள மான்செரா ஆற்றுப்பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 […]

ஐரோப்பா

பயங்கரவாதத் தாக்குதல்களின் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும் ஐரோப்பா: ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

கொலோன் கதீட்ரலில் பாதுகாப்பு சோதனைகள் பலப்படுத்தப்படடுள்ளன. மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கதீட்ரலில் பார்வையிடும் வருகைகள் தடைசெய்யப்பட்டன, ஆஸ்திரியாவில், வியன்னாவில் உள்ள பொலிசார், தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் சந்தைகளைச் சுற்றி பாதுகாப்பை முடுக்கிவிட்டதாகக் தெரிவித்துள்ளனர். தடை இருந்தபோதிலும், நாள் முழுவதும் சேவைகள் நடைபெற்றன. இந்த மிரட்டல் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பிடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. விடுமுறை கொண்டாட்டங்களைத் தொடரவும், தேவாலயத்திற்குச் செல்வதை அச்சம் தடுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் மக்களை வலியுறுத்தினர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான […]

இலங்கை

யாழ் பல்கலை மாணவி உயிரிழப்பு ;வெளியான மருத்துவ அறிக்கை

  • December 24, 2023
  • 0 Comments

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி நேற்றைய தினம்(23) உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் குறித்த மாணவி நேற்றைய தினம் உயிரிழந்தார். உயிரிழப்பு தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் […]

மத்திய கிழக்கு

புனித நகரமான பெத்லகேமில் நிறுத்தப்பட்ட நத்தார் கொண்டாட்டங்கள்

  • December 24, 2023
  • 0 Comments

கத்தோலிக்க மக்களின் மிகவும் புனிதமான நகரமான பெத்லகேமில் இந்த ஆண்டு நத்தார் பண்டிகை கொண்டாட்டங்கள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பெத்லகேம் ஒரு பாலஸ்தீனிய நகரமாக ஆளப்படுவதே இதற்குக் காரணம். நகரில் பாரம்பரியமாக நத்தார் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டாலும், காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சமீபகால வரலாற்றில் பெத்லகேம் நகரில் நத்தார் பண்டிகை கொண்டாடப்படாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். நத்தார் பண்டிகையை முன்னிட்டு வத்திக்கானில் உள்ள புனித […]