இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

  • December 24, 2023
  • 0 Comments

கடந்த 24 மணித்தியாலங்களில்,  நீதி நடவடிக்கையின் மூலம் 1534 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இவர்களில் 23 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 99 பேர் மறுவாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைதுசெய்வதற்காக பொலிஸாரால் அமுல்படுத்தப்படும் நீதி நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 03 நாட்களுக்கு இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட […]

ஆசியா

தைவான் ஜலசந்தியில் மீளவும் அதிகரிக்கும் பதற்றம்!

  • December 24, 2023
  • 0 Comments

கடந்த 24 மணி நேரத்தில், எட்டு சீன போர் விமானங்கள் தைவான் ஜலசந்தியின் இடைநிலைக் கோட்டைக் கடப்பதைக் கண்டறிந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா, தைவானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக உரிமைக்கோரி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக சீனா- தைவான் மோதல் அதிகரித்து வருகிறது. தைவானில் வரும் 2024  ஜனவரி 13ஆம் திகதி அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், சீனா தனது பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. தைவானின் பாதுகாப்பு அமைச்சகம், சீன ஜே-10, […]

இலங்கை

இலங்கை : மாத்தறை சிறைக் கைதிகளை பொதுமக்கள் பார்வையிடும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

  • December 24, 2023
  • 0 Comments

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கான நேரம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் (24.12) நாளையும் (25.12) கைதிகளை பார்வையிடுவதற்கான விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மேற்படி அறிவிப்பினை  சிறைச்சாலை சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மாத்தறை சிறைச்சாலையில் 08 கைதிகள் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்படி, உயிரிழந்த கைதியின் உயிரியல் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. எவ்வாறாயினும், மூளைக் காய்ச்சல் காரணமாக குறித்த […]

இலங்கை பொழுதுபோக்கு

இலங்கையில் பிறந்த பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

  • December 24, 2023
  • 0 Comments

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் போது அவருக்கு 60 வயதாகும். இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகர் போண்டா மணி, 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து பொன்விலங்கு, பொங்கலோ பொங்கல், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் […]

ஐரோப்பா

உக்ரைனில் பீரங்கி குண்டுகளை கொள்வனவு செய்வதில் பாரிய மோசடி!

  • December 24, 2023
  • 0 Comments

இராணுவத் துறையில் ஊழலைக் களையப் போவதாக பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சில அதிகாரிகள் பீரங்கி குண்டுகளை அதிக விலைக்கு வாங்கும் முயற்சியை மேற்கொண்டதாக  உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. விசாரணையின் விளைவாக ஒரு அதிகாரி தடுத்து வைக்கப்பட்டார் மற்றும் மற்றவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாநில பாதுகாப்பு சேவை மற்றும் பொது வழக்கறிஞர் அலுவலகம் நடத்திய கூட்டு விசாரணையில், வெடிமருந்து உற்பத்திக்கான துறைத் தலைவர் தலைமையிலான […]

உலகம்

மெக்ஸிகோ எல்லையில் திரண்ட பெருமளவான புலம்பெயர்ந்தோர்!

  • December 24, 2023
  • 0 Comments

இவ்வருடம் நிறைவுறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பெருமளவிலான புகலிடக்கோரிக்கையாளர்கள் மெக்ஸிகோ எல்லைப் பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று (23.12) 600 க்கும் மேற்பட்ட மக்கள், பெரும்பாலும் வெனிசுலா மற்றும் ஹோண்டுராஸைச் சேர்ந்தவர்கள், ஈகிள் பாஸ், டெக்ஸில் மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசித்துள்ளதாக கூறப்படுகிறது. இது வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்வோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் அடுத்த வருடத்தில் (2024) அமெரிக்க ஜனாதிபதி […]

உலகம்

அமெரிக்காவில் 120,000 மாடல் S மற்றும் X கார்களை திரும்பப்பெறும் டெஸ்லா நிறுவனம்!

  • December 24, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள 120,000 மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் வாகனங்களை டெஸ்லா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. விபத்தின்போது கதவுகள் தானாக திறப்பதற்கான வாய்ப்பிருப்பதாக கூறி, பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் 2021-2023 ஆண்டுக்கான ஓவர்-தி-ஏர் (OTA) மென்பொருள் புதுப்பிப்பை வெளியிட்டது. இது பக்க-தாக்கப் பாதுகாப்பிற்கான கூட்டாட்சி பாதுகாப்பு தரங்களுடன் இணங்கவில்லை என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (23.12) இடம்பெற்ற […]

இலங்கை

இலங்கையில் பிற்பகல் வேளையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • December 24, 2023
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (24.12) சிறிதளவு மழை பெய்யும் எனவும் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. திணைக்களத்தின் அறிவிப்பின்படி, சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைப்பகுதியின் கிழக்கு சரிவுகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும், காற்றின் வேகமானது […]

ஆசியா

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சிக்கிய படகு : அவசர அழைப்பு விடுத்த ஐ.நா!

  • December 24, 2023
  • 0 Comments

இந்தியப் பெருங்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே படகொன்று சிக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகில் 185 பேர் பயணித்த நிலையில், அவர்களை மீட்க ஐக்கிய நாட்டு நிறுவனம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. கப்பலில் இருந்தவர்களில் 70 பேர் குழந்தைகள் மற்றும் 88 பேர் பெண்கள் என்று UNHCR அகதிகள் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறைந்தது ஒரு டஜன் பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அஞ்சப்படுகிறது, ஒரு நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மியான்மரில் கடுமையாக […]

ஆசியா

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • December 24, 2023
  • 0 Comments

தைவானில் இன்று (24.12) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக GFZ ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கி.மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகவில்லை.