ஐரோப்பா

ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி அபாயம் ஏற்படக்கூடும் என்பதால் ஜப்பானுக்கு அருகிலுள்ள ரஷ்யாவின் சகாலின் தீவு மற்றும் பசிபிக் நகரமான விளாடிவோஸ்டாக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சகாலினில் அவசர சேவைகள் “சுனாமி எச்சரிக்கை” அறிவித்தது, தீவின் மேற்கு கடற்கரை “சுனாமி அலைகளால் பாதிக்கப்படலாம்” என்று அறிவித்துள்ளது. விளாடிவோஸ்டாக்கில் உள்ள நகர அதிகாரிகளும் எச்சரிக்கையை அறிவித்து மீனவர்களை “அவசரமாக கரைக்கு திரும்ப” உத்தரவிட்டனர்.  

ஐரோப்பா

பிரான்சில் அதி உச்ச பாதுகாப்பிற்கு மத்தியில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் கைது!

  • January 1, 2024
  • 0 Comments

பிரான்சில் புதுவருட கொண்டாட்டங்களின்போது கலகத்தில் ஈடுபட்ட 380 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவருடத்தை முன்னிட்டி பிரான்சில் 90000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் சிறிய அளவிலான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட முந்நூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டவர்களை விட குறைவாகும். முந்தைய சில ஆண்டுகளை விட மிக குறைந்த அளவு வன்முறைச் சம்பவங்களே பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் தெரிவித்துள்ளார்.

இலங்கை

மதுபானங்கள் மீதான கலால் வரி அதிகரிப்பு: வௌியான வர்த்தமானி

மதுபானங்கள் மீதான கலால் வரியை அதிகரித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது. அதி விசேஷம் சாராயம் மீதான கலால் வரி லீற்றருக்கு 840 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பனை, தேங்காய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சாராயம் மீதான கலால் வரி 900 ரூவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா

2024 இல் அதிக ஆயுதங்களை உற்பத்தி செய்ய உள்ள உக்ரைன்

2024ஆம் ஆண்டை எதிர்பார்த்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி “2024ஆம் ஆண்டு அதிக ஆயுதங்களை தயாரிக்க தயாராகி வருகிறது” என்று கூறியுள்ளார். “ஒவ்வொரு உக்ரேனிய சிப்பாய்க்கும், நமது முழு தேசத்திற்கும், நமது மாநிலத்திற்கும் தேவையான தீர்வுகளில் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டின் கடைசி நாளில், 49 ரஷ்ய ஆளில்லா விமானங்களில் 21ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது. உக்ரைனும் ரஷ்யாவின் ஆளில்லா விமானத் தாக்குதலை சனிக்கிழமை […]

இலங்கை

இலங்கையில் புதிய கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்ட வசந்தா பெரேரா தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

  • January 1, 2024
  • 0 Comments

புதிய கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்ட வசந்தா பெரேரா இன்று (01) கல்வி அமைச்சில் தனது பணியை ஆரம்பித்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான திருமதி வசந்தா பெரேரா அவுஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் திட்ட முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில் முதுகலைப் டிப்ளோமாவையும், பொருளாதார அபிவிருத்தியில் முதுகலைப் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். முன்னதாக, திருமதி வசந்தா பெரேரா நீதி, மின்சாரம் மற்றும் எரிசக்தி, சுகாதாரம் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுக்களில் செயலாளர் பதவிகளை வகித்தார். இதற்கிடையில், அவர் […]

ஐரோப்பா

போரில் உக்ரைன் வலுப்பெற்று வருகிறது: ஜெலென்ஸ்கியின் புத்தாண்டு வாழ்த்து

  உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது புத்தாண்டு உரையில் 2024 இல் ரஷ்ய படைகளுக்கு எதிராக “கோபத்தை” கட்டவிழ்த்து விடுவதாக உறுதியளித்துள்ளார். உக்ரைன் போர் அதன் இரண்டாம் ஆண்டை நோக்கி நகரும்போது பலமாகிவிட்டது என்றும் கூறியுள்ளார். ஆனால் Zelenskiy வின் 20 நிமிட வீடியோ செய்தி, அவரது Kyiv அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டது, 1,000-km முன்வரிசையின் நிலைமை அல்லது ஜூன் மாதம் தொடங்கப்பட்ட எதிர்த்தாக்குதல் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடவில்லை.

பொழுதுபோக்கு

விஜய் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு… 6 பேர் படுகாயம்

  • January 1, 2024
  • 0 Comments

கடந்த 17, 18ம் தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. தாமிரபரணி உள்ளிட்ட பல ஆறுகளில் இருந்து உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதில் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளார்கள். இதையடுத்து தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் விஜய்யும் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குமாறு தனது விஜய் மக்கள் இயக்க […]

இலங்கை

66 தங்க பிஸ்கட்டுகளை கடத்திய ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஊழியர் கைது

66 தங்க பிஸ்கட்டுகளுடன் ஸ்ரீலங்கன் கேட்டரிங் சேவையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களை நேற்று மாலை விமான நிலைய வளாகத்திற்கு வெளியே அழைத்துச் செல்ல முற்பட்ட போது 176 மில்லியன் ரூபா பணம் கிடைத்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியருக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்தத் தவறியதால், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் […]

உலகம்

செங்கடலில் பதிலடி தரும் நோக்கில் அமெரிக்க வான்படையினர் அதிரடி தாக்குதல் – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி

  • January 1, 2024
  • 0 Comments

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க வான்படையினர் நடத்திய தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலியாகி உள்ளனர். அவர்களது 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 3 மாதங்களை கடக்க உள்ளது. இதனால் மத்திய கிழக்கு முழுமைக்கும் பதற்றம் தொடர்ந்து வருகிறது. இதில் ஒன்றாக, காசாவின் ஹாமஸ் படையினருக்கு ஆதரவாக, ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்களது செங்கடல் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதன்படி இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் செங்கடலில் […]

இந்தியா

கேரளாவில் அதிர்ச்சி… ஒன்றரை வயது மகனின் கையை உடைத்து விட்டு காதலனுடன் எஸ்கேப் ஆன தாய்!

  • January 1, 2024
  • 0 Comments

கேரளாவில் ஒன்றரை வயது சிறுவனை அடித்து உதைத்து கையை உடைத்து காயப்படுத்திய சிறுவனின் தாய் மற்றும் அவரது காதலன் ஆகியோர் தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த பிஜு என்பவருக்கும் தீபா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து தீபா, அவரது ஆண் […]