இலங்கை

அந்நியனாகவும், அம்பியாகவும் மாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க : சாணக்கியன் விமர்சனம்!

  • February 1, 2024
  • 0 Comments

அதிகாரம் இருக்கும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்நியனாக மாறுவதுடன் ஆட்சியதிகாரம் இல்லாவிட்டால் அம்பியாக மாறுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரில் உள்ள ஹேமியோபதி வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (01.02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், மேற்படி குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாநகரசபையின் கட்டிடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இயங்கிவரும் ஹேமியோபதி வைத்தியசாலைக்கு உதவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக […]

இலங்கை

கெஹலிய கோ கம : கைது செய்யப்பட்ட 10 சிவில் செயற்பாட்டாளர்களுக்கு பிணை

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தற்போதைய சுற்றாடல் அமைச்சருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை (2ம் திகதி) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆசியா

செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் : இத்தாலியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் அபாயம்

யேமனின் ஹவுதிகளின் தாக்குதல்களால் செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது இத்தாலியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாக இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். சூயஸ் கால்வாய் வழியாக இத்தாலிக்கு செல்லும் போக்குவரத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுளளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில், இந்த நிலைமை தொடர்வது மத்தியதரைக் கடலில் உள்ள துறைமுகங்கள் ஓரங்கட்டப்படுவதற்கு வழிவகுக்கும். இது வழிசெலுத்தலின் பாதுகாப்பை மட்டுமல்ல இத்தாலியின் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் அச்சுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுளளது.

பொழுதுபோக்கு

மீண்டும் ஆரம்பமானது GOAT படத்தின் ஷெட்யூல்… விஜய் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?

  • February 1, 2024
  • 0 Comments

நடிகர் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் The greatest of all time படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சிறப்பாக நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்துவரும் நிலையில் தற்போது சென்னையில் சில தினங்கள் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கை தொடர்ந்து படக்குழுவினர் ராஜஸ்தான், துருக்கி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்த கட்டங்களில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தின் […]

ஐரோப்பா

ஐரோப்பாவின் தற்போதைய பணவீக்க நிலைமை!

  • February 1, 2024
  • 0 Comments

ஐரோப்பாவில் பணவீக்கம் ஜனவரியில் 2.8% ஆகக் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியப் புள்ளியியல் நிறுவனமான யூரோஸ்டாட் இன்று (01.02) வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி விலைகள் 6.3% சரிந்தன, இது யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் 20 ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பணவீக்கத்தின் வீழ்ச்சிக்கு பங்களித்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022 இன் பிற்பகுதியில் பணவீக்கம் பதிவு செய்யப்பட்ட உயர் இரட்டை இலக்கங்களுக்கு உயர்ந்தபோது, நுகர்வோர் இழந்த வாங்கும் சக்தியை ஈடுசெய்ய விலைவாசிகள் மற்றும் ஊதிய […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மீது முட்டைகளையும் கற்களையும் வீசி விவசாயிகள் போராட்டம்

இன்று விவசாயிகள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மீது முட்டைகளையும் கற்களையும் வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடத்தின் அருகே தீவைத்தும், பட்டாசுகளை வெடித்தும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் வரிகள் மற்றும் அதிகரித்து வரும் செலவினங்களுக்கு உதவுமாறு வலியுறுத்தினார்கள். உச்சிமாநாடு நடைபெறும் இடத்திலிருந்து சில தொகுதிகளுக்கு அப்பால் – பாராளுமன்றத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் உடைக்க முயன்றனர், ஆனால் பொலிசார் அவர்களை மீது கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி தடுத்துள்ளனர். நாடாளுமன்றத்திற்கு அருகில் […]

இலங்கை

திருகோணமலையில் இரு கடைகள் உடைக்கப்பட்டு பாரிய திருட்டு சம்பவம்

  • February 1, 2024
  • 0 Comments

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவில் ஒரு வாரத்திற்குள் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருட்டுச் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இச்சம்பவம் இன்று (01) அதிகாலை இடம் பெற்றுள்ளது. மொரவெவ- மஹதிவுல்வெவ பகுதியில் பாரிய சில்லறை கடைகள் இரண்டு உடைக்கப்பட்டு பணம், பிஸ்கட், சிகரெட் மற்றும் ஏனைய முக்கிய பொருட்கள் திருடப்பட்டுள்ளதுடன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவின் முக்கிய பாகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெட்டி உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மொரவெவ-பொலிஸார் தீவிர விசாரணைகளை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு எதிராக பெற்றோர்கள் முன்னெடுத்துள்ளஅதிரடி நடவடிக்கை!

  • February 1, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் 5,000 பெற்றோர் இணைந்து பிரபல சமூக ஊடகமான டிக்டாக்கிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. டிக்டாக் செயலியானது இளம் சமூகத்தினரை அழித்து வருவதாகக் குற்றம் சுமத்திய குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கானது அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

ஜேர்மனியில் பீர் விற்பனையில் ஏற்பட்ட பாரிய சரிவு!

  • February 1, 2024
  • 0 Comments

ஜேர்மன் பீர் விற்பனை கடந்த ஆண்டு 4.5% வீழ்ச்சியடைந்தது, இது நீண்ட கால கீழ்நோக்கிய போக்கை மீண்டும் தொடங்கியதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. ஜெர்மனியை தளமாகக் கொண்ட மதுபான ஆலைகள் மற்றும் விநியோகஸ்தர்கள் கடந்த ஆண்டு சுமார் 8.4 பில்லியன் லிட்டர் (2.2 பில்லியன் கேலன்கள்) பீர் விற்பனை செய்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது அல்லாத பீர் வகைகள் இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கப்படவில்லை. 2022 ஆம் […]

பொழுதுபோக்கு

பவதாரிணி கடைசியாக இசையமைத்த படம் என்ன தெரியுமா? எமோஷனல் பேச்சு

  • February 1, 2024
  • 0 Comments

பாடகி மற்றும் இசையமைப்பாளர் பவதாரிணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி பித்தப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவர் கடைசியாக புயலில் ஒரு தோணி என்ற படத்துக்கு இசையமைத்தார். இயக்குநர் ஈசன் என்பவர் இயக்கியிருக்கும் இப்படமானது விரைவில் வெளியாகியிருக்கிறது. இந்தச் சூழலில் பவதாரிணி குறித்து ஈசன் எமோஷனலாக பேசியிருக்கிறார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. பவதாரிணி கடைசியாக புயலில் ஒரு தோணி என்ற படத்துக்கு இசையமைத்தார். படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஈசன் என்பவர் படத்தை இயக்க […]