அந்நியனாகவும், அம்பியாகவும் மாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க : சாணக்கியன் விமர்சனம்!
அதிகாரம் இருக்கும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்நியனாக மாறுவதுடன் ஆட்சியதிகாரம் இல்லாவிட்டால் அம்பியாக மாறுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரில் உள்ள ஹேமியோபதி வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (01.02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், மேற்படி குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாநகரசபையின் கட்டிடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இயங்கிவரும் ஹேமியோபதி வைத்தியசாலைக்கு உதவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக […]













