உலகம்

செங்கடலில் பதற்ற நிலை – தவிக்கும் 16,000 கால்நடைகள்

  • February 1, 2024
  • 0 Comments

செங்கடலில் பதற்ற நிலையால் 16,000 கால்நடைகள் தவித்து வருவதாக தெரிவிக்கப்படகின்றது. ஆஸ்திரேலியாவில் இருந்து 14,000 செம்மறியாடுகளையும் 2,000 மாடுகளையும் ஏற்றிக்கொண்டு செங்கடலில் பயணம் செய்யவிருந்த கப்பலைத் திரும்பி வருமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட அந்தக் கப்பலை ஏமனில் உள்ள ஹௌதி கிளர்ச்சிக்காரர்கள் தாக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து கப்பலில் உள்ள கால்நடைகளின் பாதுகாப்புக் கருதி அந்தக் கப்பல் திருப்பி விடப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள கால்நடைகள் நலத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் 40 […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வரும் ஒன்லைன் காப்புச் சட்டம்

  • February 1, 2024
  • 0 Comments

இலங்கையில் நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். அதன்படி இன்று முதல் இந்த சட்டம் அமுலுக்கு வருகின்றது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிந்திருக்க வேண்டியவை

இருளைப் பார்த்தால் பயப்படும் நபரா நீங்கள்? உங்களுக்கான தீர்வு

  • February 1, 2024
  • 0 Comments

பயம் என்பது பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் இயற்கையான மனித உணர்வு. இதில் மிகவும் பொதுவான பயங்களில் ஒன்று இருளைப் பார்த்து பயப்படுவது. இதை ‘நிக்டோபோபியா (Nyctophobia)’ என அழைப்பார்கள். இது நமது பரிணாம வளர்ச்சியின் தொடக்க காலத்திலிருந்தே வேரூன்றிய ஒரு உள்ளுணர்வாகும். ஏனெனில் இருள் என்பது ஆபத்துக்களுடன் தொடர்புடையது. ஆனால் நவீன உலகில் செயற்கை ஒளி நமது சுற்றுப்புறங்களை ஒளிரச்செய்து பயம் சார்ந்த அனுபவங்களை முற்றிலுமாக மாற்றிவிட்டது. இருள் பயத்தைப் புரிந்துகொள்ளுதல்: பெரும்பாலும் இருள் பற்றிய பயம் […]

இலங்கை

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட குவியும் சுற்றுலா பயணிகள்

  • February 1, 2024
  • 0 Comments

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு தாமரை கோபுரத்திற்கு 50,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளனர். தாமரை கோபுர நிர்வாகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த 50,000 ஆவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு நிர்வாகத்தினரால் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி தாமரைக் கோபுரம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

வாழ்வியல்

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவ வேண்டும்?

  • February 1, 2024
  • 0 Comments

ஆண்களை விட பெண்கள் தான் அழகில் அதிகம் கவனம் செலுத்துவார்கள் ,அழகு பராமரிப்பில் முக்கிய பங்காக திகழ்வது தண்ணீர் தான் . தண்ணீரை குடிப்பதோடு மட்டுமல்லாமல் அதில் முகத்தை கழிவினால் ஏற்படும் பலன்கள் மற்றும் எந்த சருமம் உள்ளவர்கள் எத்தனை முறை கழுவலாம் என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.. தண்ணீர் நாம் அதிகமாக குடித்தால் நம் உடலில் தேங்கியுள்ள கழிவுகள் நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும். அதற்காக தண்ணீரை பார்க்கும்போதெல்லாம் கழுவ வேண்டும் என்று இருக்கக் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியர்களுக்கு தாமதமின்றி கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டம்!

  • February 1, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியர்களுக்கு தாமதமின்றி கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, கடவுச்சீட்டை விரைவாகப் பெற விரும்பும் எவரும் முன்னுரிமை சேவைகள் மூலம் மிக இலகுவாக தமது உரிமத்தைப் பெற முடியும் என ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு அலுவலகம் அறிவித்துள்ளது. அதற்கு விண்ணப்பம் சமர்ப்பித்து, அலுவலகத்தில் இரண்டு வேலை நாட்களுக்குள் உரிய சேவைகளை மக்கள் பெற முடியும். இருப்பினும், இந்த முன்னுரிமை சேவைகளுக்கு விண்ணப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு அல்லது […]

மத்திய கிழக்கு

பாலஸ்தீன அகதிகளின் நலனுக்காக தொடங்கப்பட்ட ஐ.நா. அமைப்பில் ஹமாஸ் ஊடுருவல்

  • February 1, 2024
  • 0 Comments

பாலஸ்தீன அகதிகளின் நலனுக்காக தொடங்கப்பட்ட UNRWA என்ற ஐ.நா. அமைப்பில், ஹமாஸ் இயக்கத்தினர் ஊடுருவி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அந்த அமைப்பை கலைத்து விடுமாறு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம், இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் நடத்திய தாக்குதலில், UNRWA ஊழியர்கள் 12 பேர் நேரடியாக பங்கேற்றதாக அவர் முன்னர் குற்றம் சாட்டி இருந்தார். அதை தொடர்ந்து, பல நாடுகள் அந்த அமைப்புக்கு உதவுவதை நிறுத்திக்கொண்டன. அந்த அமைப்பில் 13 ஆயிரம் பேர் பணியாற்றிவரும் […]

வட அமெரிக்கா

பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட மார்க்

  • February 1, 2024
  • 0 Comments

மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். சமூக ஊடகங்கள் ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக அமெரிக்க செனட் சபையினால் கூட்டப்பட்ட குழுவிற்கு நேற்று வந்திருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மார்க் ஜுக்கர்பெர்க் தவிர, ஐந்து முன்னணி சமூக ஊடக நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 4 மணி நேரத்திற்கும் மேலான விளக்கக்காட்சிகளில், சமூக ஊடகங்கள் மூலம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் உட்பட பல்வேறு […]

விளையாட்டு

விமானத்தில் குடித்த தண்ணீர்.? மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னணி

  • February 1, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் கர்நாடக மாநில அணியின் கேப்டனாகவும் உள்ள மயங்க் அகர்வால் தற்போது திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அடுத்த போட்டிக்கு சூரத் செல்வதற்காக திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையம் சென்று இருந்தார். அங்கு , அவர் ஏறிய இண்டிகோ விமானத்தில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இனி கையடக்கதொலைபேசியை Unlock செய்ய மூச்சுக்காற்று போதும்!

  • February 1, 2024
  • 0 Comments

ஐஐடி மெட்ராஸ் விஞ்ஞானிகள் மனிதர்களின் முகம், கருவிழி, கைரேகையைப் போலவே மூச்சுக்காற்றை பயோமெட்ரிக்காக பயன்படுத்த முடியும் எனக் கூறுகின்றனர். இதனால் மருத்துவத்துறை, தொழில்நுட்பத் துறை போன்ற பல துறைகளில் பல புதுமையான விஷயங்களை செய்ய முடியும் என்கின்றனர். மெட்ராஸ் ஐஐடியில் உள்ள அப்ளைட் மெக்கானிக்ஸ் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையில் பேராசிரியர் மகேஷ் தலைமையிலான ஆய்வுக் குழு, மனித மூச்சுக்காற்றை பயன்படுத்தி ஒரு தனித்துவமான பயோமெட்ரிக் அமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இப்போது இதில் பல […]