ஐரோப்பா

சூடானால் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படவுள்ள சிக்கல்!

  • February 5, 2024
  • 0 Comments

சூடானின் போரிடும் தரப்புகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படாவிட்டால் ஐரோப்பா புதிய சிக்கல்களை சமாளிக்க வேண்டி வரும் என அகதிகள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிட்டால் அங்குள்ள சூடானிய அகதிகள் ஐரோப்பா நோக்கி நகர்வார்கள் என்றும், இதனால் புதிய சிக்கல்கள் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ஐரோப்பியர்கள் எப்போதும் மத்திய தரைக்கடல் வழியாக வருபவர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள் என்றும் லிபியா, துனிசியா மற்றும் மத்தியதரைக் கடல் வழியாக மக்கள் […]

உலகம்

கிராமி விருது விழாவில் வைத்து பிரபல ராப் இசை பாடகர் கைது!

  • February 5, 2024
  • 0 Comments

66 வது கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்வின்போது பிரபலமான ராப் இசை பாடகரான கில்லர் மைக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் அவருடைய இரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இசைத்துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் குறித்த விருது வழங்கும் நிகழ்வானது, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்நிலையில் குறித்த நிகழ்வில் விருதினை வென்ற கில்லர் மைக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.

ஐரோப்பா

லண்டனிலிருந்து அதிகப் பணத்தைக் கோரும் புதிய வடக்கு அயர்லாந்து அரசாங்கம்

வடக்கு அயர்லாந்தின் புதிய அதிகாரப் பகிர்வு நிர்வாகி பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 3.3 பில்லியன் பவுண்டுகள் தொகுப்பு, வரவேற்கத்தக்கது என்றாலும், குறுகிய கால தீர்வை மட்டுமே வழங்கும் மற்றும் நிலையான பொது சேவைகளை வழங்குவதற்கான அடிப்படையை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிசம்பரில் இந்த தொகுப்பை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை

நிதி நிறுவனமொன்றில் திருட்டு சம்பவம் ;இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது!

  • February 5, 2024
  • 0 Comments

நிதி நிறுவனமொன்றில் புகுந்து பணத்தை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இரண்டு பெண்கள் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜனவரி 31ஆம் திகதி, சிலாபம் பொலிஸ் பிரிவில் உள்ள நிதி நிறுவனமொன்றில் புகுந்து 7,090,939 ரூபாவை திருடியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை ஒருவர் நேற்று (04) கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.தெனியாய […]

இலங்கை

இலங்கை : சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை வழங்கி உத்தரவு!

  • February 5, 2024
  • 0 Comments

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த விபத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசியா

ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண நிதி ஸ்பெயின் வெளியிட்ட அறிவிப்பு

ஐ.நா. பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனமான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு ஸ்பெயின் கூடுதலாக 3.5 மில்லியன் யூரோக்கள் உதவி அனுப்புவதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேலுக்குள் நடந்த ஹமாஸ் தாக்குதலில் 12 ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவன ஊழியர்கள் பங்கேற்றதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நிதி உதவியை அதிரடியாக நிறுத்திய பின்னர் குறிப்பிடத்தக்க […]

இலங்கை

சாந்தனை இலங்கைக்கு அழைத்துவர அமைச்சரவை அனுமதி!

  • February 5, 2024
  • 0 Comments

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் இன்று (05.02)அமைச்சரவையின் கவனத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்தார். இந்நிலையில் அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.  இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அவர் கூறியுள்ளார்.

இலங்கை

ஆஸ்திரேலியா விருதுகள் புலமைப்பரிசில்கள் 2025: வெளியான முக்கிய அறிவிப்பு

Australia Awards என்ற உதவித்தொகை அல்லது புலமைப் பரிசு, வளரும் நாடுகளிலுள்ள அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க ஆஸ்திரேலிய அரசு வழங்கும் மதிப்புமிக்க சர்வதேச விருது ஆகும். இந்த விருது பெறுபவர்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மூலம், அவர்களது சொந்த நாட்டில் மாற்றத்தை உண்டாக்குவதற்கான திறன்களையும் அறிவையும் வளர்த்துக் கொள்கிறார்கள். ஆஸ்திரேலியா விருதுகள் 2025 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. 2025 இல் தொடங்கும் ஆஸ்திரேலியா விருதுகள் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் இப்போது திறக்கப்பட்டு 30 ஏப்ரல் […]

பொழுதுபோக்கு

பல வருடங்களுக்குப் பின் மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் களமிறங்கும் ரஜினி-கமல்

  • February 5, 2024
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். வேட்டையனை முடித்துவிட்டு விரைவில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் தலைவர் 171, தக் லைஃப் இரண்டும் ஒரே நாளில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1980, 1990களில் ரஜினி, கமல் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாவது வழக்கமாக இருந்தது. இருவருமே நீயா நானா என பாக்ஸ் ஆபிஸில் மோதிக் கொண்டனர். கடைசியாக […]

உலகம்

இருளில் மூழ்கிய கலிஃபோர்னியா!

  • February 5, 2024
  • 0 Comments

கலிஃபோர்னியாவில் ஏறக்குறைய 50000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியா கடந்த சில நாட்களில் இரண்டு புயல்களை சந்தித்துள்ளது. இதன்காரணமாக அங்கு மழை மற்றும் மோசமான வானிலை நிலவுகிறது. இதன்படி சாண்டா பார்பரா முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரையிலான பகுதியில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசுகிறது. அத்துடன் சுமார் 37 மில்லியன் குடியிருப்பாளர்கள் இப்போது வெள்ள எச்சரிக்கையின் கீழ் உள்ளதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.