ஐரோப்பா செய்தி

உலக சாதனை படைத்த ரஷ்ய விண்வெளி வீரர்

  • February 5, 2024
  • 0 Comments

ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் கொனோனென்கோ விண்வெளியில் அதிக நேரம் செலவழித்து உலக சாதனை படைத்துள்ளார். அவர் பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே 878 நாட்கள் மற்றும் 12 மணிநேரங்களுக்கு மேல் செலவிட்டார், மொத்தம் சுமார் இரண்டரை ஆண்டுகள், 59 வயதான அவர் 2017 இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஐந்து விண்வெளி பயணங்களில் மொத்தம் 878 நாட்கள், 11 மணி நேரம், 29 நிமிடங்கள் மற்றும் 48 வினாடிகள் விண்வெளியில் இருந்த தனது சகநாட்டவரான ஜெனடி படல்காவின் […]

செய்தி விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை

  • February 5, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Rahmat Shah அதிகபட்சமாக 91 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் விஷ்வ பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களையும், […]

இலங்கை

மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம்

ஜோதிர்லிங்க அருங்காட்சியம் இன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் திறந்துவைக்கப்பட்டது இந்தியாவின் புகழ்பெற்ற 12 சிவாலயங்களிலிருந்து பெறப்பட்ட சிவலிங்கங்கள் மற்றும் 16அடி உயரம் கொண்ட சிவலிங்க தியானம் மண்டபம் என பல்வேறு அம்சங்கள் கொண்ட ஜோதிர்லிங்க அருங்காட்சியம் இதுவாகும் பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வின் ஆரம்பத்தில் கலைக் கூடத்தின் நினைவு படிகம் திரை நீக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து சிவலிங்க தோற்றத்தில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தியான […]

ஐரோப்பா

இராணுவச் சட்டத்தை மேலும் நீட்டிக்க ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்

இராணுவச் சட்டம் மற்றும் பொது அணிதிரட்டலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்க உக்ரைன் பாராளுமன்றத்தில் ஒரு திட்டத்தை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமர்ப்பித்துள்ளார். 24 பிப்ரவரி 2022 அன்று ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியபோது ஜனாதிபதி முதலில் இராணுவச் சட்டம் மற்றும் பொது அணிதிரட்டலை அறிவித்தார். அதன்பிறகு இந்த நடவடிக்கை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பாராளுமன்றம் முன்னர் இராணுவச் சட்டம் மற்றும் அணிதிரட்டலை நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 14, 2024 வரை […]

இலங்கை

ஜனாதிபதியின் வீட்டிற்கு தீ வைப்பு: சந்தேகநபரான ஆசிரியர் ஒருவர் கைது

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என தெரியவந்துள்ளது. 2022ல் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது, ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது  

இலங்கை

இலங்கை பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று முறிந்து வீழந்ததில் மாணவர் ஒருவர் பலி!

  • February 5, 2024
  • 0 Comments

கம்பளையில் உள்ள  பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து முறிந்து விழுந்ததில் ஐந்து வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் ஒருவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நர்சரி பிரிவில் கல்வி பயிலும் 30 மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது மேற்படி மரம் முறிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு

விஜய்யின் என்ட்ரி… கடுப்பாகி ட்வீட் போட்ட நடிகை கஸ்தூரி – எதற்காக தெரியுமா?

  • February 5, 2024
  • 0 Comments

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் தளபதி விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தனது “தமிழக வெற்றி கழகம்” கட்சி குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தான் ஒப்புக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு, தன் திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். தனது 69வது படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ள தளபதி விஜய் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வரவேற்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு […]

இலங்கை

கோவையில் 52 வருடங்கள் கழித்து சந்தித்துக்கொண்ட மாணவர்கள் : நெகிழ்ச்சியான சம்பவம்!

  • February 5, 2024
  • 0 Comments

கோவையில் நடைபெற்ற முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பில் 52 வருடம் கழித்து தங்களுக்கு சொல்லி கொடுத்த ஆசிரியர்களுடன் பழைய நினைவுகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். கோவை சிங்காநல்லூர் பகுதியில் தியாகி என்.ஜி.ஆர் நினைவு மேனிலைபள்ளி உள்ளது. இங்கு 1972ல் இருந்து படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பள்ளியில் பயின்று பல்வேறு நாடுகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தங்களுக்கு பாடங்களை கற்று கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்களை வரவழைத்து […]

உலகம்

தென்மேற்கு ஜெர்மனியில் தீ விபத்தில் ஐவர் படுகாயம்

ஜேர்மனியின் தென்மேற்குப் பகுதியில் நேற்று பிற்பகல் திருவிழா மிதவை ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு ஜேர்மனியில் பிரான்சின் எல்லையை ஒட்டிய நகரமான கெஹ்லில் உள்ளூர் அணிவகுப்பில் பங்கேற்ற மிதவையின் ஒரு பகுதி தீப்பிடித்தது. இதன்போது தீயணைப்பு வீரர்கள் விரைவாக தீயை அணைக்க முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் மீதமுள்ள அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

இலங்கை

முல்லைத்தீவில் கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று 25.01.2024 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக பட்டா ரக வாகனமும் மோதி விபத்து நேர்ந்துள்ளது. குறித்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த நவீன் என்ற இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை […]