உலகம்

UAEமீது ஈரான் தாக்குதல்: ஆஸ்திரேலிய படைத் தளம் சேதம்!

  • March 18, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தில் UAE உள்ள அல் மின்ஹாத் விமான தளத்தின் Al Minhad Air Base மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலை அடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் ஆஸ்திரேலிய ராணுவத்தின் மருத்துவ மற்றும் தங்கும் வசதிகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். எனினும்,அ முகாமிட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய படையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார். இந்தத் தளம் ஆஸ்திரேலியாவின் முக்கியப் பயிற்சி மற்றும் […]

உலகம்

இஸ்ரேல்மீது ஏவுகணை மழை பொழியும் ஈரான்: இருவர் பலி!

  • March 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் இன்று 19 ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் இஸ்ரேல் டெல் அவிவ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலால் ரமத் கான் பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையான சேதமடைந்துள்ளன என்றும், அங்கிருந்து புகை மூட்டம் எழுவதாகவும் அவசரக்கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பல கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளதோடு, அப்பகுதி முழுவதும் […]

உலகம் செய்தி

நிச்சயம் பழி தீர்ப்போம்: ஈரான் ராணுவத் தளபதி சபதம்!

  • March 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பாதுகாப்பு பிரதானி அலி லாரிஜானி Ali Larijani கொல்லப்பட்டதற்கு ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி Amir Hatami கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செயலுக்குப் பழிவாங்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது நிச்சயமான மற்றும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் புரட்சிகர காவல்படை ஏற்கனவே இஸ்ரேலின் மையப்பகுதிகளை நோக்கி ஏவுகணைகளை ஏவித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த வீரர்களின் மரணத்திற்கு நீதி வழங்கப்படும் என்று […]

ஐரோப்பா செய்தி

கென்ட் பல்கலைக்கழக விடுதிகளில் MenB தடுப்பூசி திட்டம் அறிவிப்பு

  • March 17, 2026
  • 0 Comments

கென்டர்பரியில் (Canterbury) உள்ள கென்ட் பல்கலைக்கழக (University of Kent) விடுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு எதிராக, வரும் நாட்களில் அரசாங்கம் ஒரு இலக்கு மென்பி (MenB) தடுப்பூசி திட்டம் தொடங்கும் என சுகாதாரச் செயலாளர் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்தார். இரண்டு இளைஞர்களின் உயிரைப் பறித்த “முன்னெப்போதும் இல்லாத இந்த நோய்ப் பரவல்” குறித்து ஸ்ட்ரீட்டிங் தனது இரங்கலைத் தெரிவித்தார். இன்று காலை 09:30 க்கு நிலவரப்படி, நான்கு MenB நோய்த்தொற்று பாதிப்புகள் உறுதியானதாகவும் […]

இலங்கை செய்தி

நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது

  • March 17, 2026
  • 0 Comments

நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உச்சகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக அவர் இன்று (17) இரவு 7.30 க்கு விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “உலகளாவிய ரீதியில் யுத்தம் எந்த எல்லைக்குச் சென்றாலும், இலங்கை தனது நடுநிலை கொள்கையிலிருந்து தவறாது. சர்வதேச அளவில் […]

உலகம் செய்தி

போருக்கு மத்தியில் அமெரிக்காவின் முக்கிய புள்ளி ராஜினாமா!

  • March 17, 2026
  • 0 Comments

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் US’s National Counterterrorism Center இயக்குநர் ஜோ கென்ட் (Joe Kent) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகின்றது. ஈரானுக்கு எதிரான போரை தன்னால் மனசாட்சியுடன் ஆதரிக்க முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்எனக் கூறப்படுகின்றது. டிரம்ப் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட இவர், இந்தப் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் நடக்கும் இத்தகைய மோதல்கள் அமெரிக்காவின் செல்வத்தையும் உயிர்களையும் […]

இலங்கை செய்தி

QR சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளன- மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்

  • March 17, 2026
  • 0 Comments

  எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 10,000 பேரைத் தவிர ஏனைய அனைவரும் தமக்குரிய QR குறியீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார். இதன்படி, இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் QR குறியீட்டைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பதிவு செய்யும் போது சிலருக்கு மாத்திரம் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பெரும்பாலான தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் மீண்டும் […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் குறித்து தெரிவுக்குழு இன்று ஆராய்வு!

  • March 17, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிப்பதற்காகவே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அரசு நியமித்திருக்கின்றது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நால்வரும் இவ்வாறு குற்றஞ்சாட்டினர். தெரிவுக் குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இன்று முற்பகல் 11 மணி முதல் நடைபெற்றது. ஏற்கனவே எட்டாவது நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், முன்னர் இருந்த தேர்தல் முறைமைகளின் கீழ் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியை தாக்கும் மூளைக்காய்ச்சல் – மென்பி உறுதி, மக்களிடையே அச்சம் அதிகரிப்பு

  • March 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் பரவியுள்ள மூளைக்காய்ச்சலுக்குக் காரணமான கிருமி வகை “மூளைக்காய்ச்சல் பி (MenB).” என பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு முகமை (UKHSA) உறுதிப்படுத்தியுள்ளது. மென்பி தற்போது பிரித்தானியாவில் அதிகம் காணப்படும் பக்டீரியா மூளைக்காய்ச்சல் வகையாக இருந்து, 80%க்கும் மேற்பட்ட தீவிர தொற்றுகளுக்குக் காரணமாக உள்ளது. இந்த தொற்று குறித்து பொதுமக்களுக்கு தகவல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கவலைகள் எழுந்துள்ளன. முதல் பாதிப்புகள் பதிவான பின்னர் ஒரு நாள் கழித்து மட்டுமே தகவல் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், […]

இலங்கை செய்தி

தென் கடலில் 250 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் – அறுவர் கைது

  • March 17, 2026
  • 0 Comments

கடற்படையினரால் சுமார் 250 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றைய தினம் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. தென் கடலில் IMULA – A- 1108GLE என்ற இலக்கத்தைக் கொண்ட பிரியங்கா – 6 பலநாள் மீனவப் படகு மூலம் இந்த போதைப்பொருள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. படகிலிருந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.