ஐரோப்பா

ட்ரம்ப் புடினைப் புரிந்து கொள்ளவில்லை: ஜெலென்ஸ்கி

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால், “அமெரிக்கர்களுக்கு எதிராக” இருப்பார் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “டொனால்ட் டிரம்ப் புட்டின் பக்கம் எப்படி இருக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை” எனவும் தெரிவித்துளளார். தென் கரோலினா குடியரசுக் கட்சியின் பிரைமரியில் வெற்றி பெற்ற பின்னர் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான விளிம்பில் இருக்கும் டிரம்ப், போரில் ரஷ்யா அல்லது உக்ரைன் வெற்றி பெற விரும்புவாரா என்று […]

இலங்கை

அதிக விலைக்கு அப்பிள் பழத்தை விற்கும் நாடுகளில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

உலகில் ஒரு கிலோக்கிராம் அப்பிள் பழத்தை அமெரிக்க டொலரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதனை உலகின் மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு தரவுத்தளமான நம்பியோ (Numbeo) வெளியிட்டுள்ளதாக The Spectator Index டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. அதன்படி இலங்கையில் 7.04 அமெரிக்க டொலருக்கு அப்பிள் பழம் விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை முதலிடத்தில் இருக்கும் நியூயோர்க்கில் 7.05 டொலருக்கு அப்பிள் விற்பனை செய்யப்படுகின்றது. அப்பிள் பழத்தை […]

உலகம் செய்தி

அசுத்தமான இருமல் மருந்து மரணம் – 23 பேருக்கு தண்டனை வழங்கிய உஸ்பெகிஸ்தான்

  • February 26, 2024
  • 0 Comments

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அசுத்தமான இருமல் மருந்தை உட்கொண்ட 68 குழந்தைகளின் மரணத்தில் தொடர்புடைய 21 பேருக்கு உஸ்பெகிஸ்தான் தண்டனைகளை வழங்கியது. மத்திய ஆசிய நாட்டில் 2022 மற்றும் 2023 க்கு இடையில் குறைந்தது 86 குழந்தைகள் விஷம் குடித்துள்ளனர், அவர்களில் 68 பேர் இறந்தனர். டாக்-1 மேக்ஸ் சிரப்பை உஸ்பெகிஸ்தானில் இறக்குமதி செய்த நிறுவனத்தின் இயக்குனரான இந்திய குடிமகன் சிங் ராகவேந்திர பிரதாப்புக்கு 20 ஆண்டுகள் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின்படி, அவர் […]

ஆசியா

வியட்நாம் மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடிய 100 போதைக்கு அடிமையானவர்கள்

  • February 26, 2024
  • 0 Comments

வியட்நாமில் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு மறுவாழ்வு மையங்கள் செயல்ப்படுகின்றன. ஆனால் இந்த மையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கிருந்து போதைக்கு அடிமையானவர்கள் தப்பிச் செல்லும் நிகழ்வும் தொடர்கதையாகிறது. அவ்வகையில் மேகாங் டெல்டா பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து 191 பேர் தப்பிச் சென்றுள்ளனர். அறைகளின் கதவை […]

விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

  • February 26, 2024
  • 0 Comments

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 2-வது இன்னிங்சை தொடங்கிய […]

தமிழ்நாடு

வேலைக்கு போகச்சொல்லி தாய் திட்டியதால் ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்த இளைஞர்!!

  • February 26, 2024
  • 0 Comments

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு வேலை வழங்க வேண்டும் என்ற பதாகையுடன் வாலிபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் எதிரே ஒரு இளைஞர் அரசு வேலை வழங்க வேண்டும் என்ற பதாகையுடன், இன்று மதியம் நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். மேலும் நுழைவாயில் அருகே உள்ள நான்குவழிச் சாலையில் அங்குமிங்கமாக ஓடினார். இதனை கண்ட அப்பகுதியில் […]

இலங்கை

36வது பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்!

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். சற்றுமுன்னர் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஆசியா

அதிரடி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: ரஃபா நகரில் இருந்து மக்களை வெளியேற்ற திட்டம்

முழுமையான வெற்றியை பெறுவதற்கு ரஃபா மீது தரைவழி தாக்குதல் அவசியம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார் . இதையடுத்து,ரஃபா நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவத்தின் தரைப்படை முன்னேற திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் காசா பகுதியில் போர் நடக்கும் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் திட்டம் மற்றும் அடுத்தகட்ட ராணுவ செயல்பாட்டு திட்டத்தை ராணுவம் தாக்கல் செய்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் எப்படி, எந்த பகுதிக்கு மாற்றப்படுவார்கள்? என்பது […]

இந்தியா

கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவுக்கு பிரதமர் மோடி பயணம் : வெளியான அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார், அங்கு அவர் ரூ.24,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு வைக்கவுள்ளார். அதன்படி, வரும் 27 ஆம் திகதி மதியம் 1.20 மணிக்கு கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து புறப்படும் பிரதமர், மதியம் 2 மணி அளவில் கோவை சூலூர் வந்தடைகிறார். அங்கிருந்து மதியம் 2.10 […]

ஐரோப்பா

அலெக்ஸி நவல்னிக்கு பொது பிரியாவிடை வார இறுதியில்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ரஷ்ய எதிர்க்கட்சி பிரமுகர் அலெக்ஸி நவல்னிக்கு பொது பிரியாவிடை இந்த வாரத்தின் இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் X பதிவில் தெரிவித்துள்ளார். நவல்னியின் உடல் கடந்த சனிக்கிழமை அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது, மேலும் அலெக்ஸி நவல்னியின் உதவியாளர்கள் பொது பிரியாவிடை நடத்துவதற்கான இடத்தைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும், பொருத்தமான இடங்களைக் கொண்டவர்கள் குழுவுடன் தொடர்பு கொள்ளுமாறும் யர்மிஷ் மேலும் கூறியுள்ளார். ரஷ்யாவிலோ அல்லது வெளிநாட்டிலோ நிகழ்வை எங்கு நடத்தலாம் என்பதற்கான […]