இலங்கை அணிக்கு ஏமாற்றம்? 3வது நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவு தொடர்பில் முறைப்பாடு
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியின் போது இடம்பெற்ற வித்தியாசமான சம்பவம் ஒன்றின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது. ஆட்டத்தின் நான்காவது ஓவரில் பினுரா வீசிய முதல் பந்து சௌமியா சர்க்கரின் துடுப்பாட்ட மட்டையில் பட்டு, விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸால் பிடியெடுக்கப்பட்டது. இதன்போது ஆடுகள நடுவர், இதனை ஆட்டமிழப்பாக அறிவித்த நிலையில், சௌமியா சர்க்கார் அதை மூன்றாவது நடுவரிடம் பரிந்துரைக்கும்படி கூறினார். இதன்போது அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தை சோதித்தபோது, […]













