அறிவியல் & தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக லண்டனில் வழக்கு பதிவு

ஆப்பிளின் செயலியின் கண்காணிப்பு விதிகள் தொடர்பாக லண்டனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் தரப்பினர் மீது நியாயமற்ற முறையில் அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதற்காக, ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்களின் செயலிகள் மற்றும் வலைத்தளங்களில் பயனர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, செயலிகளுக்கு அனுமதி வழங்குவதா வேண்டாமா என்பதை அவர்களே கட்டுப்படுத்திக்கொள்ள அனுமதிப்பதற்காகவே இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியதாக ஆப்பிள் கூறியுள்ளது.

இருப்பினும், ஆப்பிளுக்கு எதிராக இந்த புதிய வழக்கைத் தொடரும் வழக்கறிஞர்கள், இந்த அம்சம் ஆப்பிளின் சொந்த சேவைகளை விட மூன்றாம் தரப்பு செயலி உருவாக்குநர்கள் மீது கடுமையான தேவைகளை விதித்து, அதன் விளம்பரச் சூழலுக்கு ஒரு போட்டி நன்மையை அளிப்பதாகக் கூறுகின்றனர்.

இதற்கமைய ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து லண்டனில் £2 பில்லியன் (S$3.4 பில்லியன்) மதிப்பிலான வழக்கு தொடரப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்