ஐரோப்பா

ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே படகில் இருந்து ஐவரின் சடலங்கள் மீட்பு

ஸ்பெயினின் கெனரி தீவுகளுக்கு அருகே படகொன்றில் 05 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

உயிர் பிழைத்தவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 27 நாட்களுக்கு முன்பு காம்பியாவில் இருந்து புறப்பட்ட படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் ஏராளமானவர்கள் பயணித்த நிலையில் 83 பேர் உயிரிழந்துள்ளதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த எண்ணிக்கை சரிபார்க்கப்படவில்லை என ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது. மீட்புக் குழுவினர் படகை அடைந்தபோது ஐவரின் சடலங்களை மட்டுமே மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்