ஐரோப்பா

ஜெர்மனியில் மனைவியை கொலை செய்தவருக்கு கிடைத்த தண்டனை

  • March 22, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் மனைவியை கொலை செய்த ஒருவருக்கு தண்டனை விதித்துக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் டியுஸ்பேர்க் மாநில நீதிமன்றமானது 26 வயது நபர் ஒருவருக்கு 13 வருட கடூழிய சிறை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது 26 வயதுடைய நபரானவர் கடந்த ஆண்டு 19 வயதுடைய மனைவியை காரால் மோதி கொலை செய்ததுடன், தனது குழந்தை ஒன்றுக்கும் காயத்தை ஏற்படுத்தி இருந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பொலிஸார் இந்த கொலை தொடர்பில் அதி தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை […]

ஐரோப்பா

லண்டன் மற்றும் வொஷிங்டனுக்கு இடையில் கையெழுத்தாகவுள்ள முக்கிய ஒப்பந்தம்!

  • March 22, 2024
  • 0 Comments

லண்டன் மற்றும் வொஷிங்டனுக்கு இடையில் AUKUS அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான முக்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் AUKUS ஒப்பந்தத்தின் கீழ், சீனாவின் எழுச்சியை எதிர்கொள்ளும் முயற்சியில் மூன்று நீண்டகால நட்பு நாடுகளும் கூட்டாக தங்கள் இராணுவ வலிமையை அதிகரிக்க உறுதியளித்துள்ளன. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ், ” மூன்று அரசாங்கங்களும் இதைச் செய்வதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். “இது நடக்கும், […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரிலிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள்

  • March 22, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து அகதிகள் வெளியேற்றப்பட்டனர். பாரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள சுரங்கம் ஒன்றின் அருகே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அகதிகள் புதன்கிழமை காலை வெளியேற்றப்பட்டனர். அகதிகளில் 14, 15 வயதுடைய சிறுவர்கள் உள்ளடங்கலாக மொத்தம் 120 அகதிகள் இருந்ததாகவும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பரிசில் வசிக்கும் அகதிகள், வீடற்றவர்களை நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் திட்டத்தை அரசு […]

இலங்கை

இலங்கை வானிலையில் திடீர் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • March 22, 2024
  • 0 Comments

கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் இன்று (22.03) சில இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீவின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த கணவர்

  • March 22, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபருக்கு 3 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனைவி வீட்டைவிட்டு வெளியேறினால் குழந்தையைக் கொல்லப்போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். குழந்தை உறங்கிக்கொண்டிருந்ததால் தொலைபேசியில் உரக்கப் பேசவேண்டாம் என்று அந்த நபரின் மனைவி கூறியிருந்தார். கோபத்தில் அந்த 24 வயது நபர் அவ்வாறு நடந்துகொண்டார். அச்சுறுத்தல் ஏற்படுத்தி, வேண்டுமென்றே காயம் விளைவித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இன்னொரு சம்பவத்தில் தமது Singpass விவரங்களை வெளியிட்டதையும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும் 3 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும். […]

ஆப்பிரிக்கா

உகாண்டாவில் இராணுவத்தின் உயர்மட்ட தளபதி பதவியில் மாற்றம்!

  • March 22, 2024
  • 0 Comments

உகாண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசெவேனி தனது மகனை இராணுவத்தின் உயர்மட்ட தளபதியாக நியமித்துள்ளார். முசெவேனியின் மகன், ஜெனரல் முஹூசி கைநெருகபா, சமீபகாலமாக நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகிறார். இராணுவ அதிகாரிகள், கட்சிசார்ந்த அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டத்தை மீறி பேரணிகள் நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் கைநெருகபா மக்களிடையே தேசபக்தியை வளர்க்கும் விதமாக மேற்படி பேரணிகள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் வியாழன் பிற்பகுதியில் கைநெருகாபா தனது புதிய பதவிக்கு பதவி உயர்வு பெற்றதாக இராணுவ அறிக்கை […]

உலகம்

சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீருக்கான அணுகல் அமைதியை மேம்படுத்துவதில் முக்கியமானது!

  • March 22, 2024
  • 0 Comments

உலகளவில், 2.2 பில்லியன் மக்கள் இன்னும் பாதுகாப்பாக நிர்வகிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் வாழ்கின்றனர் எனவும் 3.5 பில்லியன் மக்கள் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் சுகாதார வசதியின்றி உள்ளதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஏஜென்சியின் அறிக்கையானது, நீர் அணுகல் தொடர்பான பதட்டங்கள், அத்தியாவசிய வளங்கள் மீதான பற்றாக்குறை மற்றும் மன அழுத்தத்திற்கு எப்படி இட்டுச் செல்கின்றன என்பதை விவரித்துள்ளது. சுகாதாரம், கல்வி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, நிலையான சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் இந்த நன்மைகளை […]

இலங்கை

ரணிலின் முடிவுக்கு கட்டுப்படும் மஹிந்த!

  • March 22, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயாராக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மே தினம் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாக இருப்பினும் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் கடவுச்சீட்டு கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

  • March 22, 2024
  • 0 Comments

பிரித்தானியா புதிய கடவுச்சீட்டு விண்ணப்பக் கட்டணத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. பிரித்தானியாவில் கடவுச்சீட்டு கட்டணங்கள் 7 வீதத்தால் அதிகரிக்க உள்ளதாக உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 16 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பங்களுக்கான கட்டணம், 82.50 பவுண்டுகளிலிருந்து 88.50 பவுண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது. 16 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம், 53.50 பவுண்டுகளிலிருந்து 57.50 பவுண்டுகளாகவும் உயர உள்ளதாக […]

ஆசியா செய்தி

ஆப்கானிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பொறுப்பேற்ற IS

  • March 21, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் தெற்கு நகரமான காந்தஹாரில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார். சிட்டி சென்டர் வங்கியில் தற்கொலைத் தாக்குதல் நடந்ததாக தலிபான் அரசாங்கம் கூறுகிறது. இது பலி எண்ணிக்கையை மூன்றாகக் காட்டுகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இஸ்லாமிய அரசு (IS) குழு பொறுப்பேற்றுள்ளது மற்றும் தாலிபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறுகிறது. IS இன் “செய்தி நிறுவனம்” வெளியிட்ட அறிக்கையின்படி, “சுமார் 150” தலிபான் உறுப்பினர்கள் கூட்டத்தின் […]