திருகோணமலையில் கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும், மொரவெவ பொலிஸாரும்- கந்தளாய் பிரதேசத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட மோப்ப நாய்களின் உதவியுடனும் குறித்த சந்தேக நபரை கஞ்சாவுடன் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பல நாட்களாக கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 45 வயதான நைசர் என்றழைக்கப்படும் முஹம்மது ஹாசீம் பிரதான சந்தேக நபர் […]













