உலகம்

இஸ்ரேலுக்கு ஐ.நா உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

  • March 29, 2024
  • 0 Comments

ஐநாவின் உச்ச நீதிமன்றம், காஸாவிற்கு பஞ்சம் ஏற்படாமல் தடுக்க தடையில்லா உதவிகளை வழங்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு  உத்தரவிட்டுள்ளது. ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் ஒருமனதாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. “தாமதமின்றி” அத்தியாவசிய அடிப்படை சேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்கு இஸ்ரேல் காசான்களை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு கூறுகிறது. சில வாரங்களுக்குள் காஸா பகுதியில் பஞ்சம் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் காஸாவிற்கு உதவிகள் செல்வதைத் தடுக்கிறது […]

இலங்கை

முன்விரோதம் காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

  • March 29, 2024
  • 0 Comments

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 31 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (28) காலை உயிரிழந்துள்ளார். லுணுகம்வெஹர பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா

இந்தியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து : 10 பேர் பலி!

  • March 29, 2024
  • 0 Comments

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் உள்ள பேட்டரி சாஷ்மா அருகே கார்ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 10 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 1.15 மணியளவில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், உள்ளூர் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), மற்றும் சிவில் விரைவுப் பதிலளிப்புக் குழு (QRT) ரம்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த மழைக்கு […]

உலகம்

தென்னாபிரிக்காவில் தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து… 45பேர் பலியான சோகம் !

  • March 29, 2024
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ ஆராதனையில் பங்கேற்க சென்றவர்களின் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவின் வடகிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் மோரியா நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக கபோரோன் நகரில் இருந்து ஒரு பேருந்தில் கிறிஸ்தவர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை […]

பொழுதுபோக்கு

‘சூர்யா 44’- கார்த்திக் சுப்புராஜ்… உறுதியான அறிவிப்பு

  • March 29, 2024
  • 0 Comments

பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். வித்தியாசமான கதைக் களங்களில் படம் எடுப்பதில் கார்த்திக் சுப்புராஜ் திறம் பெற்றவர். இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோவை பிரதிபலிக்கும். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம்.ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா போட்டி போட்டு நடித்துருப்பர் சினிமாவையே கதைக்களமாக வைத்து […]

இலங்கை

இலங்கையில் விசேட வர்த்தக வரியை நீக்க நடவடிக்கை!

  • March 29, 2024
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கவும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் புதிய வரி அறிமுகப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இன்று (29.03) காலை ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளை எளிமையாக்கியதும் இந்த முடிவை எடுத்ததற்கு ஒரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

இலங்கையில் முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் மின்சாரம் : கவலையில் மக்கள்!

  • March 29, 2024
  • 0 Comments

வவுனியாவில் முன்னறிவித்தல் இன்றி மின் துண்டிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். தற்போது மின் பட்டியல் அனுப்பப்படாமல் தொலைபேசி இலக்கத்திற்கே மின் கட்டண அறிவித்தல் வழங்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் சம்பளம் கிடைத்த மறுநாள் மின் பட்டியலை செலுத்த காத்திருக்கும் நிலையில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின்சாரசபையினர் மின்சாரத்தை துண்டித்து செல்வதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மின்சாரசபை காரியாலயத்தில் பாவனையாளர்கள் விளக்கம் கேட்டு முரண்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

உக்ரைன் போரை விமர்சித்த ரஷ்ய பத்திரிகையாளருக்கு நேர்ந்த கதி

  • March 29, 2024
  • 0 Comments

ரஷ்ய நீதிமன்றம் ஒரு பத்திரிகையாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் அத்துமீறல் மீதான விமர்சனமே அதற்குக் காரணம். இதேவேளை, உக்ரைன் போரை விமர்சித்த மேலும் ஐந்து நிருபர்களும் 24 மணித்தியாலங்களுக்குள் ரஷ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிருபர் ஒருவர் ரஷ்ய பொலிஸாரால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கை : முட்டை விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

  • March 29, 2024
  • 0 Comments

நாட்டில் மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், டிசம்பர் மாதம் வரை முட்டையின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரத்னஸ்ரீ அழககோன் தெரிவித்துள்ளார். முட்டையின் விலை 35 ரூபாயாகக் குறைந்தால் சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். கடந்த 2023ஆம் ஆண்டு அரசாங்கம் அதிகமான கோழிகளை இறக்குமதி செய்துள்ளது. இதன் விளைவாக, 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முட்டைகளினதும் கோழிக் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 17 சொகுசு கார்கள் வைத்திருந்த வர்த்தகருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • March 29, 2024
  • 0 Comments

மெல்போர்னில் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு சொந்தமான 4 மில்லியன் டொலர் பெறுமதியான சொகுசு கார்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 4 மில்லியன் டொலர் பெறுமதியான 17 சொகுசு கார்கள் விக்டோரியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விக்டோரியா பொலிசார் மணி பாண்ட்ஸில் உள்ள ஒரு வணிகத்தை சோதனை செய்தனர் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஹார்மோன்கள் சட்டவிரோதமாக வைத்திருந்ததைக் கண்டறிந்துள்ளனர். இந்த வியாபாரத்தின் உரிமையாளர் என கூறிக்கொண்ட நபரும் சோமர்டனில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வைத்து கைது […]