ஐரோப்பா

பிரித்தானிய ராணுவத்தில் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

பிரித்தானிய ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இப்போது தாடி வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். பல மாதங்கள் நீடித்த இராணுவத்தின் பணியாளர்களின் தோற்றம் குறித்த இராணுவத்தின் கொள்கையை மறுஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த புதிய கொள்கை புதிய ஆட்களை ஈர்க்க உதவும் என்று ராணுவத் தலைவர்கள் நம்புவதாக கருதப்படுகிறது. டென்மார்க், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் போன்ற பல வெளிநாட்டுப் படைகள் துருப்புக்களை தாடி வளர்க்க அனுமதிக்கின்றன. பணியாளர்கள் சுத்தமாக […]

இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவு யாருக்கு?: விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து

‘வருகின்ற ஜனாதிபதி தேர்தல் காலகட்டத்தில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது’ என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை பொறுத்த வரையில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம் எனவும் முன்னாள் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் […]

இலங்கை

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை -இளைஞன் ஒருவர் கைது

  • March 29, 2024
  • 0 Comments

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28.03.2024) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளத்தின் அருகிலுள்ள காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் கொஸ்தாபிள் பிரதீபனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் […]

பொழுதுபோக்கு

நம்ம சிவாங்கி பாப்பாவுக்கு கல்யாணமா? என்னம்மா சொல்லுறீங்க?

  • March 29, 2024
  • 0 Comments

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட சிவாங்கி அதில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட பின்னர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசன்களில் போட்டியாளராக கலந்துகொண்டு, வெற்றிவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொறுத்தவரை, கோமாளியாக இருந்தால் அவர்களுக்கு அடுத்தடுத்த சீசன்களில் வாய்ப்பளிக்கப்படும். ஆனால் குக்காக கலந்துகொள்பவர்களுக்கு ஒரு சீசன் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் குக் ஆக கலந்துகொண்டதன் காரணமாக இனி சிவாங்கியால் அந்நிகழ்ச்சியில் […]

இலங்கை

மட்டக்களப்பில் விசேட அதிகரடிப்படையின் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்ற திருச்சிலுவை பாதை நிகழ்வு

உலகெங்கும் ஜேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் பெரிய வெள்ளியாக அனுஸ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்றைய தினம் பெரியவெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருசிலுவை பாதை நிகழ்வுகள் பக்தி பூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் இன்றைய தினம் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. விசேட அதிகரடிப்படையின் பாதுகாப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை இன்று (29.03.2024) குருக்கள்மடம் […]

இலங்கை

சிவனொளிபாதமலையில் இருந்து விழுந்த வௌிநாட்டவருக்கு நேர்ந்த கதி

இரத்தினபுரி – சிவனொளிபாதமலை வீதியின் எஹலகனுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 100 மீற்றருக்கும் அதிகமான பள்ளத்தில் விழுந்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) முகாமில் இருந்து ஒரு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். மும்பை மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பரத் சந்திரதாஸ் (25) இன்று அதிகாலை 5.00 மணியளவில் பாதுகாப்பு வேலியில் இருந்து பள்ளத்தாக்கில் இருந்து கீழே விழுந்துள்ளார். உடமலுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த […]

ஆசியா

சிரியாவில் இஸ்ரேலிய தாக்குதல்: பலர் பலி

இன்று அதிகாலை சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போ மீது இஸ்ரேலிய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “குறைந்தது 36 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்,” என்று தெரிவிக்கப்படுகிறது. அலெப்போவின் கிராமப்புறங்களில் பல பகுதிகளை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:45 மணியளவில் (2245 GMT) அலெப்போவின் கிராமப்புறங்களில் பல பகுதிகளை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. […]

இலங்கை

இலங்கை: 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனங்கள்

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மே மாதத்திற்குள் பாடசாலைகளில் நியமனங்கள், ஆரம்ப பயிற்சிகள் மற்றும் பதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார். தோட்டத் துறைப் பாடசாலைகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்த அவர், கல்லூரிக்குத் தகுதிபெறும் மாணவர்களே மிகக் குறைவு என்றும் பட்டதாரிகளில் ஒரு சிலரே உள்ளனர். இதற்கு […]

பொழுதுபோக்கு

ஆடு ஜீவிதம் படத்தில் ஆட்டுக்கும் ஹீரோவுக்குமான பாலியல் காட்சிகள்… இயக்குநர் கொடுத்த ஷாக்

  • March 29, 2024
  • 0 Comments

ஆடு ஜீவிதம் நாவல் கேரளாவில் இந்த அளவுக்கு கொண்டாடப்பட முக்கிய காரணமே சவுதியில் ஆடு மேய்க்கும் வேலைக்குத் தள்ளப்படும் நஜீப் ஒரு கட்டத்தில் ஆடாகவே மாறி ஆட்டுடன் உறவு கொண்ட கதைகளும் அடங்கியிருப்பது தான் என்கின்றனர். பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் படத்தின் முழு வெர்ஷன் 3.30 மணி நேரம் படம் என்றும் அதில் இடம்பெற்ற அந்த மாதிரியான காட்சிகளுக்கு தணிக்கை குழு கத்தரி போட்டுள்ளதாக இயக்குநர் பிளஸ்ஸி சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பது ரசிகர்களை […]

இந்தியா

அத்தையை கொலை செய்ய அடுத்தடுத்து திட்டம் போட்ட இளம்பெண்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

  • March 29, 2024
  • 0 Comments

நகை, பணத்திற்காக தனது அத்தையைக் கொலை செய்ய அடுத்தடுத்த முயற்சி செய்த மருமகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஆர்எம்சி யார்டு காவல் நிலையம் அருகே வசிப்பவர் அன்னம்மா. குழந்தை இல்லாத இவர், வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறார். அத்துடன் சம்பாதித்த பணம், நகைகளை வீட்டில் வைத்திருந்தார்.அன்னம்மாவின் அக்கா மகள் சுசித்ரா. இவர் அன்னம்மா வீட்டிற்கு அடிக்கடி வந்து போய் உள்ளார். அப்போது அன்னம்மா வீட்டில் பணம், […]