செய்தி வட அமெரிக்கா

சூரிய கிரகணத்தை முன்னிட்டு அவசரகால நிலையை அறிவித்த நயாகரா பிராந்தியம்

  • April 1, 2024
  • 0 Comments

கனடாவின் நயாகரா பகுதி, ஏப்ரல் 8 ஆம் தேதி அரிய முழு சூரிய கிரகணத்திற்கு முன்னதாக அவசரகால நிலையை அறிவித்தது, இது பிராந்தியத்தின் பிரபலமான நீர்வீழ்ச்சிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் கூட்டத்தை சேகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயாகரா பிராந்தியம் ஒரு அறிக்கையில், பிராந்திய தலைவர் ஜிம் பிராட்லி “அதிகமான எச்சரிக்கையுடன்” அவசரகால நிலையை அறிவித்தார். “அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது … குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும், எழக்கூடிய எந்தவொரு சூழ்நிலையிலும் எங்கள் […]

இலங்கை செய்தி

யாழில் வீடு புகுந்து கையை வெட்டிய கும்பல்

  • April 1, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) வாள்களுடன் சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது வாளால் வெட்டியதுடன். வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த […]

ஆசியா செய்தி

விமான விபத்தில் இஸ்ரேலிய உயர் தொழில்நுட்ப தம்பதியினர் பலி

  • April 1, 2024
  • 0 Comments

இஸ்ரேலிய உயர் தொழில்நுட்ப தொழிலதிபர் லிரோன் பெட்ருஷ்கா மற்றும் அவரது மனைவி நவோமி ஆகியோர் கலிபோர்னியாவில் விமான விபத்தில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ட்ரக்கி தாஹோ விமான நிலையத்தில் நெவாடா எல்லைக்கு அருகில் தரையிறங்க முயன்ற தம்பதியரின் விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் கொலராடோவின் டென்வரில் உள்ள நூற்றாண்டு விமான நிலையத்தில் இருந்து சனிக்கிழமை மாலை 4.20 மணியளவில் புறப்பட்டது. டிரக்கி தாஹோ விமான நிலைய அதிகாரிகள் ஒரு பேஸ்புக் பதிவில், ”தேசிய போக்குவரத்து […]

ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் மோசடியாளரிடம் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய இலங்கையர்

  • April 1, 2024
  • 0 Comments

சமூக ஊடகங்களில் சந்தித்த நபரின் நிதி மோசடியில் சிக்கிய மெல்பேர்னில் வசிக்கும் பெண் ஒருவரை இலங்கை வங்கி அதிகாரி ஒருவர் காப்பாற்றியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பெண் தனது காதலன் எனக் கூறிக்கொண்ட வெளிநாட்டவருக்கு பணம் அனுப்புவதற்காக “நேஷனல் அவுஸ்திரேலியா வங்கியின்” (NAB) மெல்போர்ன் கிளைக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர் ஆலோசகராக இருந்த இலங்கையைச் சேர்ந்த திலான் பத்திரனவுக்கு இந்தப் பெண் வழங்கிய தகவல் தொடர்பில் சந்தேகம் எழுந்ததால், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. […]

இலங்கை செய்தி

கொழும்பில் நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த கார் – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சாரதி

  • April 1, 2024
  • 0 Comments

கொழும்பு – தெஹிவளை மேம்பாலத்தில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்ததில் இன்று இரவு விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது காரில் பயணித்த நபர் வெளியே குதித்து உயிரை காப்பாற்றினார். இதனையடுத்து மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் வந்து தீயை அணைத்துள்ளன. காரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி விளையாட்டு

உலக அளவில் பேசப்படும் மதிஷவின் பிடியெடுப்பு

  • April 1, 2024
  • 0 Comments

ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணியின் வீரர் மத்திஷ பத்திரன  பிடித்த கேட்ச் குறித்து உலகம் முழுவதும் சிறப்புப் பேசப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியாவின் பலம் வாய்ந்த தாக்குதல் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னர் அடித்தப் பந்தை, மத்திஷ பத்திரன லாவகமாக பிடித்திருந்தார். அவரின் பிடியெடுப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. டேவிட் வார்னர் 35 பந்துகளில் 52  ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். பந்து வீச்சிலும் திறமையை வெளிப்படுத்திய பத்திரன தனது அபார பந்துவீச்சு மூலம் […]

இலங்கை செய்தி

யாழில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு இளைஞர்

  • April 1, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார். நேற்று (31) மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்றவர் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை செய்தி

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படாதது ஏன்?

  • April 1, 2024
  • 0 Comments

ஒக்டேன் 92 எரிபொருள் லீற்றருக்கு 130 ரூபாவும், ஆட்டோ டீசல் லீற்றருக்கு 107 ரூபாவும் அரசாங்கம் தற்போது வரி அறவிடுவதாக தெரியவந்துள்ளது. மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருளின் விலை நேற்று (31) நள்ளிரவு முதல் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் இரண்டு வகையான எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் மற்றும் பாடசாலை வேன்களின் கட்டணங்களில் மாற்றம் செய்வதில்லை என சங்கங்கள் தீர்மானித்துள்ளன. எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், நேற்று […]

இலங்கை செய்தி

வித்தியா கொலை குற்றவாளி சிறையில் மரணம்

  • April 1, 2024
  • 0 Comments

சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் சிறைச்சாலையில் மரணமடைந்துள்ளார். அவசர சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  அவர் நேற்று (31) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது உயிரிழந்தவர் 41 வயதுடையவர் எனவும் அவர் மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அந்த நபர் பக்கவாதம் காரணமாக அவ்வப்போது நோய்வாய்ப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி […]

செய்தி விளையாட்டு

இலங்கை அணி 455 ஓட்டங்களால் முன்னிலை

  • April 1, 2024
  • 0 Comments

பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 06 விக்கட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ஓட்டங்களுடனும், பிரபாத் ஜயசூரிய 03 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நிஷான் மதுஷ்கா 34 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். திமுத் கருணாரத்ன 04 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 02 ஓட்டங்களையும் மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் தனஞ்சய சில்வா ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்ததுடன், 09 ஓட்டங்களைப் பெற்றிருந்த […]