இலங்கை செய்தி

எரிவாயு விலை அதிகரித்தன் பின்னணி என்ன – அரசாங்கம் கூறும் விளக்கம்

  • April 7, 2026
  • 0 Comments

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டிலும் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சவுதி அரம்கோ விலை சுட்டெண்ணுக்கமைய, உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, “பொதுவாக எல்.பி.ஜி எரிவாயு விலை சுட்டெண்ணில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சவுதி அரம்கோ சுட்டெண்ணின்படி ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 541.5 […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து துருக்கியில் பயங்கரவாதத் தாக்குதல்: நடந்தது என்ன?

  • April 7, 2026
  • 0 Comments

துருக்கி Turkish இஸ்தான்புல் Istanbul நகரிலுள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு அருகில் இன்று (07) இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பாரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு தரப்பினர், மேற்படி தாக்குதலை முறியடித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவரை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மதம் சார்ந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று துருக்கியின் உள்துறை அமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். சம்பவத்தின் போது […]

உலகம் செய்தி

கோடி பேர் உயிர் தியாகம் செய்ய தயார் என ஈரான் ஜனாதிபதி அறிவிப்பு – இன்னும் சில நேரங்களில் நடக்கப் போவது என்ன?

  • April 7, 2026
  • 0 Comments

ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி விதித்த 48 மணி காலவகாசம் இன்னும் சில மணி நேரங்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஈரானுக்காக நாட்டில் உள்ள 1.4 கோடி பேர் உயிர் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசஸ்கியன் தெரிவித்துள்ளார். ஈரானை ஒரே இரவில் அழித்துவிடுவதாக ட்ரம்ப் சபதம் எடுத்துள்ள நிலையில் ஈரான் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்து வரும் நிலையில் ட்ரம்பின் இந்த எச்சரிக்கை […]

உலகம்

நிலையற்ற தன்மை – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

  • April 7, 2026
  • 0 Comments

ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஒப்புக்கொள்வதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், சர்வதேச சந்தையில் இன்றைய தினம் மீளவும் கச்சா எண்ணெய்கான விலை அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்களின் எச்சரிக்கை உணர்வின் காரணமாக விலை உயர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 1.5% அதிகரித்து ஒரு பீப்பாய் 111.4 அமெரிக்க டாலராக உயர்ந்தது. இது தற்போது மோதலுக்கு முந்தைய விலையை விட 53% அதிகமாகும். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. […]

உலகம் செய்தி

“ஈரானின் இதயம்”மீது அமெரிக்கா தாக்குத

  • April 7, 2026
  • 0 Comments

ஈரான் கார்க் Kharg Island தீவிலுள்ள இராணுவ இலக்குகள்மீது அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன என்று தெரியவருகின்றது. சர்வதேச ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. மேற்படி தாக்குதலில் ஈரானின் பொருளாதார மையமான எண்ணெய் கட்டமைப்புகளைப் பாதிக்கவில்லை என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமாக விளங்கும் இத்தீவை முற்றிலுமாக அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். எனவே, தற்போதைய சூழலில், குறித்த தீவை கைப்பற்றுவதற்காக அமெரிக்கா தனது படையினரை அங்கு அனுப்பக்கூடும் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு போர் பதற்றம் – பாகிஸ்தானில் ஊரடங்கு

  • April 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஈரான் ஹார்முஸ் நீரிணையை தனது கட்டுக்குள்வைத்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள அனைத்து கடைகள், மால்கள் இரவு 8 மணிக்கு மூட வேண்டும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு இந்த வாரம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான ஹோட்டல்கள், ரெஸ்டுரண்ட்டுகளும் இரவு 10 மணிக்கு […]

இலங்கை செய்தி

பெலருஸ், ரஷ்ய பயணத்தை உறுதிப்படுத்தினார் விஜித ஹேரத்!

  • April 7, 2026
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் இரு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். பெலருஸ் Belarus மற்றும் ரஷ்யா Russia ஆகிய நாடுகளுக்கே அவர் விஜயம் செய்கின்றார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடுப்பகுதியில் இவ்விஜயம் இடம்பெறும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். “முதலில் பெலருஸ் நாட்டுக்கும், அங்கிருந்து ரஷ்யாவுக்கும் செல்வதற்கு […]

இலங்கை செய்தி

பாதுகாப்பான வீட்டு திட்டம் – தோட்ட தொழிலாளர்களுக்கு 5 மில்லியன் ரூபாவில் புதிய வீடு

  • April 7, 2026
  • 0 Comments

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்புதிய திட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கமைய,650 சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 05 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதுடன் தொழிலாளர்கள் தற்போது பணிபுரியும் தோட்டங்களிலேயே பாதுகாப்பான இடங்களில் 10 பேர்ச்சஸ் காணி இதற்காக ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

இலங்கை செய்தி

இந்திய படகுகளில் இருந்து மீட்கப்பட்ட பொருள்கள் யாழில் ஏலம்!

  • April 7, 2026
  • 0 Comments

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச உடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொருள்கள் யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தால் இன்று இந்த ஏல விற்பனை முன்னெடுக்கப்பட்டது. நீண்டகாலமாகத் திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இலங்கை மற்றும் இந்தியப் படகுகளுக்குச் சொந்தமான பல்வேறு பொருள்கள் இதன்போது ஏலம் விடப்பட்டன. இந்திய மீனவர்களின் படகுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புக்கள் மற்றும் மின்கலங்கள் உள்ளிட்ட பல […]

செய்தி தமிழ்நாடு

திமுகவின் ஆட்சியில் குப்பை அள்ளுவதில் கூட ஊழல் – அண்ணாலை சரமாரி கேள்வி

  • April 7, 2026
  • 0 Comments

மதுரை மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கூட, திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் முறையாகத் தயாரித்துக் கொடுக்கவில்லை என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதன் பொருள் என்னவெனில், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், விரிவான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்பட்டு, மதுரை மெட்ரோ திட்டத்துக்கான […]