உலகம்

சொந்த கண்ணிவெடியைத் தேடும் ஈரான்: உலகிற்குப் புதிய ஆபத்து!

  • April 11, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதில் ஈரானுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலின் போது, ஈரான் தனது கடல் எல்லையான ஹார்முஸ் நீரிணையில் ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளைப் (Sea Mines) பதித்தது. ஆனால், அவை எங்கு வைக்கப்பட்டன என்ற துல்லியமான ஆவணங்களை ஈரான் சரியாகப் பராமரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஈரான் தனது சிறிய படகுகள் மூலம் மிகக் குறுகிய […]

உலகம் செய்தி

ஈரான் பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது -பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் குற்றச்சாட்டு

  • April 11, 2026
  • 0 Comments

இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் இந்த மோதலில் “பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது” என்றும், சில ஊடகங்கள் தவறான படிமத்தை உருவாக்குகின்றன என்றும் அவர் குற்றம் சுமத்தினார். மேலும், ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏவுகணை மற்றும் ட்ரோன் திறன்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனுடன், ஹார்முஸ் நீரிணையில் […]

இலங்கை

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

  • April 11, 2026
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 1.8 சதவீதம் சரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி (சிபிஎஸ்எல்) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.79 ரூபாயாகவும் விற்கும் விலை   319.26  ரூபாயாகவும்  பதிவாகியுள்ளது. 2026 பிப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதைத் தொடர்ந்து வெளித்துறை அழுத்தங்கள் உருவானதன் பிரதிபலிப்பே, அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

உலகம் செய்தி

ஈரான், அமெரிக்கா அமைதி பேச்சு ஆரம்பம்!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில்  ஆரம்பமாகியுள்ளது. ஈரான் அரச ஊடகம் மற்றும் சர்வதேச ஊடங்கள் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடனேயே மேற்படி பேச்சு ஆரம்பமாகியுள்ளது. அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினரும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட தூதுக்குழுவினரும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28-ம் திகதி […]

கருத்து & பகுப்பாய்வு

டைட்டானிக் கப்பல் – இது சொல்ல மறந்த கதை!

  • April 11, 2026
  • 0 Comments

சுமார் 114 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் பல சுவாரஸ்ய கதைகளை தன்னுள் கொண்டுள்ளது. அந்த கப்பல் மூழ்கி நூற்றாண்டுகள் கடந்தாலும் அதன் வரலாறு, மற்றும் துயரம் இன்றும் மனித மனங்களில் நீடித்து நிலைத்து நிற்கிறது. தற்போது இந்த டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது இருந்து ஒரு துயரமான காதல் கதை புத்தகம் ஒன்றின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. குறிப்பாக அப்போது வெளியாகிய பல தகவல்கள் கப்பல் மூழ்கியபோது ஆண்களின் பங்களிப்பை மட்டுமே பிரதிபலித்த நிலையில், […]

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை: நீடித்த அமைதி குறித்து நம்பிக்கை

  • April 11, 2026
  • 0 Comments

அமெரிக்க துணை ஜனாதிபதி J. D. Vance மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) ஐ தனித்தனியாக சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்புகள், மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதலுக்கு நீடித்த அமைதியை ஏற்படுத்த உதவும் என ஷெரீஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆறு வாரங்களாக நீடிக்கும் இந்த மோதல் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும், உலக பொருளாதாரத்திலும் எரிசக்தி சந்தைகளிலும் கடுமையான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பேச்சுவார்த்தைகள் […]

இலங்கை செய்தி

மேற்கு ஆசிய போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு

  • April 11, 2026
  • 0 Comments

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் தற்காலிக போர்நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவது மற்றும் அது தொடர்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. பிராந்திய பதற்றத்தைத் தணிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கை இதுவென வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நிரந்தரமானதொரு தீர்வை எட்டுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு அனைத்துத் தரப்பினரிடமும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பிராந்தியத்திலுள்ள அனைத்து சமூகங்களினதும் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்காக அமைதிச் செயல்முறையின் முக்கியத்துவத்தை […]

இலங்கை செய்தி

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகள் 17 ஆம் திகதி அளவீடு!

  • April 11, 2026
  • 0 Comments

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் 17 ஆம் திகதி நில அளவீடுகள் முன்னெடுக்கப்படும் என்று கடற்தொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தையிட்டி திஸ்ஸ விகாரை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் முடங்கிய விமான சேவை : 72000 பேர் பாதிப்பு!

  • April 11, 2026
  • 0 Comments

லுஃப்தான்சா (Lufthansa) ,மற்றும் அதன் பிராந்தியப் பிரிவான லுஃப்தான்சா சிட்டிலைன் (Lufthansa CityLine,) ஆகியவற்றின் விமானப் பணியாளர்கள், UFO தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வேலை நிறுத்த போராட்டமானது நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக சுமார் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சுமார் 72000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். முடங்கிய பேச்சுவார்த்தைகளால் இந்த வேலைநிறுத்தம் ஒரு “தவிர்க்க முடியாத ஒன்று என்று UFO தொழிற்சங்கம் கூறியது. அதே நேரத்தில், லுஃப்தான்சா இந்த நடவடிக்கையை […]

உலகம்

250 ஆவது ஆண்டு வெற்றிவிழாக் கொண்டாட்டம் – நினைவு சின்னத்தை பதிக்க தயாராகும் ட்ரம்ப்!

  • April 11, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களுக்காக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தயாராகி வருகின்ற நிலையில், ஆர் டி ட்ரம்ப்” (“Arc de Trump) என அழைக்கப்படும் வெற்றிச் சின்னத்தை  பதிக்க நவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு, லிங்கன் நினைவிடத்திற்கு நேர் எதிரே, ஆர்லிங்டன் நினைவுப் பாலத்தின் அடிவாரத்தில் உள்ள நினைவு வட்டத்தில் Memorial Circle) அமைக்கப்பட உள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, நினைவுச்சின்னம், 250 அடி உயரமும் தங்க உச்சியும் கொண்ட, […]