ஐரோப்பா செய்தி

அமெரிக்க ஆதரவு தாமதமானதால் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை நிறுத்திய பிரித்தானியா

  • April 11, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் உறுதிப்படுத்தல் தாமதமானதைத் தொடர்ந்து, சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை பிரித்தானியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. முன்னர் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதனை இரத்து செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரமர் ஸ்டார்மரை வலியுறுத்தியிருந்தார். பிரித்தானிய பிரதேசத்தின் இறையாண்மையை மொரிஷியஸுக்கு வழங்கும் இந்த ஒப்பந்தத்தை தாங்கள் முழுமையாகக் கைவிடவில்லை என்றும், ஆனால் எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலவகாசம் முடிந்துவிட்டது என்றும் அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், மே மாத நடுப்பகுதியில் […]

ஐரோப்பா செய்தி

ஆங்கிலக் கால்வாய் படகு விபத்து – ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு

  • April 11, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற போது ஏற்பட்ட படகு விபத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை, கலே அருகே உள்ள செயிண்ட் எட்டியன் ஓ மான்ட் கடற்கரை பகுதியில், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, சூடான் நாட்டைச் சேர்ந்த Alnur Mohamed Ali மீது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 27 வயதான அவர், படகை பிரான்சிலிருந்து […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் M1 நெடுஞ்சாலையில் கோர விபத்து – இருவர் பலி!

  • April 11, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பாலத்தின் மேல் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று சாலையை விட்டு விலகி  கீழே சென்றுகொண்டிருந்த ஒரு மினிபஸ் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து M1 நெடுஞ்சாலையில் நேற்று  இடம்பெற்றுள்ளது. இதில் இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பேருந்தில் பயணித்த நால்வர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த சாட்சிகள் அல்லது டேஷ்கேம் காணொளிப் பதிவுகளைக் கொண்ட எவரும் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு லெஸ்டர்ஷையர் (Leicestershire) காவல்துறை வேண்டுகோள் […]

இந்தியா செய்தி

திரிணமூல் அரசின் ஊழல்கள் தொடர்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்

  • April 11, 2026
  • 0 Comments

திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய, பாஜக வெள்ளை அறிக்கையை கொண்டுவரும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். மேற்கு வங்க மாநிலம் பூர்ப பர்தமானில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். வெளியிடப்படும் அறிக்கை திரிணமூல் அரசாங்கத்தின் 15 ஆண்டுகால முழு விபரத்தையும் முன்வைக்கும் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இத்தகைய ஒவ்வொரு குற்றத்தையும் தடுக்க பாஜக ஆட்சியில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்திய […]

ஐரோப்பா செய்தி

மூளைக்காய்ச்சல் பரவல் – அடுத்த வாரம் 12,000 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்க நடவடிக்கை

  • April 11, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் மூளைக்காய்ச்சல் நோய்ப் பரவலைத் தொடர்ந்து, மெனிஞ்சைடிஸ் (meningitis) B தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுமார் 12,000 பேருக்கு இந்த இரண்டாவது டோஸ் வழங்கப்பட உள்ளது என தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. இந்த நோய்ப் பரவல் காரணமாக இருவர்பேர் உயிரிழந்ததுடன், 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக தடுப்பூசி வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கேன்டர்பரி, […]

உலகம் செய்தி

இஸ்லாமாபாத் அமைதி பேச்சு தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?

  • April 11, 2026
  • 0 Comments

அமெரிக்காவானது தனது வெளியுறவுக் கொள்கையில் இஸ்ரேலை விட சொந்த நாட்டு நலன்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஈரானின் முதலாவது துணை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெறும் அமைதி பேச்சின் வெற்றி, அமெரிக்காவின் முடிவிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலவேளை அமெரிக்கா இஸ்ரேலின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்தால், பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும். அவ்வாறு நடந்தால் ஈரான் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெப்போதையும் விட தீவிரப்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவார கால போர் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவிற்கு எதிராக திரும்பும் ஸ்டாமரின் வாக்குறுதி!

  • April 11, 2026
  • 0 Comments

ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கும் ரஷ்யாவின் நிழல் கப்பல்களை பிரித்தானியா கைப்பற்றினால், அக்கப்பலில் பணிப்புரிபவர்கள் தஞ்சம் கோர வாய்ப்புள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கடல் பகுதியில் எண்ணெய்க் கப்பல்களைக் கைப்பற்றுவது, ரஷ்ய கூலிப்படையினர் குடியேற்ற விதிகளைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுக்கும் என்று உள்துறை மற்றும் வெளியுறவுச் செயலாளர்கள் இருவரும் கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. குறித்த கால்வாயில் பயணம் செய்யும் ரஷ்யாவின் நிழல் கப்பல்களை கைப்பற்றுவதாக பிரதமர் கெய்ர் ஸ்டாமர் சில நாட்களுக்கு முன்பு உறுதியளித்தார். இருப்பினும் அத்தகைய நடவடிக்கை “சர்வதேச […]

உலகம் செய்தி

ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குகிறது சீனா?

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்குவதற்கு சீனா தயாராகிவருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. ஆயுத பரிமாற்றத்தில் தாம் பங்கேற்கவில்லை என்ற விம்பத்தை ஏற்படுத்துவதற்காக சில நட்பு நாடுகள் ஊடாக அவற்றை கையளிப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இக்காலப்பகுதியை பயன்படுத்தி தனது ஆயுத இருப்பைப் புதுப்பித்துக் கொள்ள ஈரான் முனையக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், […]

இலங்கை

பெட்ரோல் தட்டுப்பாடு குறித்து விளக்கம்!

  • April 11, 2026
  • 0 Comments

நாட்டில் வரும் ஜூன் மாத இறுதி வரை பெட்ரோல் 92 மற்றும் 95-க்கு பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைவர் டி.ஜே. ராஜகருண உறுதிப்படுத்தினார். ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 12 சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சரக்குகள் வந்து சேரும் எனவும் அவர் உறுதிப்படுத்தினார். இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், உறுதிப்படுத்தப்பட்ட சரக்குகளின் அடிப்படையில், மே மாத இறுதி வரை போதுமான டீசல் விநியோகம் இருக்கும் என்று மேலும் கூறினார். இதற்கிடையில், மின்சார […]

இந்தியா தமிழ்நாடு

‘ஜனநாயகன்’ வெளியானது அரசியல் சதி!

  • April 11, 2026
  • 0 Comments

‘ஜனநாயகன்’ படத்தை இரகிசயாக வெளியிட வைத்து வைத்து விஜய் நடத்தும் சதி அரசியல் நாடகம் எடுபடாது என தமிழக பா.ஜ.க. விமர்சித்துள்ளது. படம் வெளியானமை தொடர்பில் சி.பி.ஐ. விசாரணை கோர விஜய் தயாரா என சவாலும் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதால் 500 கோடி ரூபாவுக்கு மேல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி, மக்களை ஏமாற்றி அனுதாப […]