இலங்கை

இலங்கை – சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்களின் மோசமான செயற்பாடு!

  • January 8, 2025
  • 0 Comments

சுற்றுலா விசாவில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டினரை தடுக்கும் பொறிமுறையை அரசாங்கம் வகுக்கும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். சுற்றுலா வீசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுவதாகவும், அதனை அரசாங்கம் பிரச்சினையாக இனங்கண்டுள்ளதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம், மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொறிமுறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார். இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேலிய […]

ஆசியா

அணுசக்தி திறன் கொண்ட ஆயுதங்களின் சேகரிப்பை விரிவுப்படுத்தும் வடகொரியா!

  • January 8, 2025
  • 0 Comments

அணுசக்தி திறன் கொண்ட ஆயுதங்களின் சேகரிப்பை போட்டி நாடுகளுக்கு எதிராக மேலும் விரிவுபடுத்துவதாக வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொங் உன் சபதம் செய்துள்ளார். தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்களின் செய்தித் தொடர்பாளர் லீ சங் ஜூன் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். பசிபிக் பகுதியில் உள்ள தொலைதூர இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நேற்று வடகொரியா சோதனை செய்தது. ஏவுகணை ஒலியின் 12 மடங்கு வேகத்தில் 930 மைல்கள் பறந்ததாக வட கொரியா கூறியிருந்தது. […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

உண்டியல் முறையும் ஹவாலா முறையும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல!

  • January 8, 2025
  • 0 Comments

உண்டியல் முறையும் ஹவாலா முறையும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல என பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (08)  பல பிரேரணைகளை முன்வைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நம் நாட்டில் ஹவாலா மற்றும் உண்டியல் முறை சட்டவிரோதமானது அல்ல, ஆனால் அது எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே, இந்த ஹவாலா மற்றும் உண்டியல் முறை மூலம் சர்வதேச அளவில் பணப் […]

ஆசியா

திபெத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சீனா!

  • January 8, 2025
  • 0 Comments

சீனாவின் திபெத்தில் உள்ள ஷிகாஸ்டே நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சீன மத்திய அரசு வழங்கிய முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் சென்றடைந்துள்ளன. குறித்த பகுதிகளுக்கு நேற்று (07) இரவு நிவாரணப் பொருட்கள் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் மற்றும் தேசிய உணவு மற்றும் சேமிப்பு நிர்வாகத்தால் தொடர்புடைய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதில் ஏறக்குறைய 6,000 கூடாரங்கள், படுக்கை விரிப்புகள் மற்றும் உடைகள் உள்ளடங்கியதுடன் மேலும் 16,000 நிவாரணப் பொருட்கள் […]

ஆசியா

திபெத் நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு

  • January 8, 2025
  • 0 Comments

திபெத்தில் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 7) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.குறைந்தது 126 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 188 பேர் காயமடைந்ததாகவும் சீன அரசுக்குச் சொந்தமான சிசிடிவி ஊடகம் செய்தி வெளியிட்டது. நிலநடுக்கம் காரணமாக நேப்பாளத்திலோ வேறு இடத்திலோ யாரும் மரணமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இமாலய மலைப்பகுதிகளின் மலையடிவாரத்தில் 400க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாகச் சீன அதிகாரிகள் கூறினர்.30,000க்கும் மேற்பட்டோர் அவர்களது வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8ஆகப் பதிவானது. […]

பொழுதுபோக்கு

ஹன்சிகா மீது போலீசில் பரபரப்பு புகார்… திரையுலகில் பெரும் அதிர்ச்சி

  • January 8, 2025
  • 0 Comments

ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது அம்மா மீது குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை, ஹன்சிகாவின் அண்ணன் மனைவியான தொலைக்காட்சி நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸ் கொடுத்துள்ளார். ஹன்சிகாவும், அவரின் தாயார் மோனாவும் தன்னை கொடுமை படுத்துவதாக கூறி, இருவர் மீதும் குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தில் நடிகை ஹன்சிகாவின் பதிவு ஒன்றும் வைரலாகி வருகிறது. ஆனால், ஹன்சிகா நேரடியாக இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் அவரது சமூக ஊடகப் […]

இலங்கை செய்தி

வெளிநாட்டுப் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

  • January 8, 2025
  • 0 Comments

வெளிநாட்டுப் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 9 கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளைக் கடத்திவந்ததாகக் கூறப்படும் நபரே கைது செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவிலிருந்து வருகை தந்த 66 வயதுடைய பொஸ்னிய நாட்டு பிரஜையொருவரே சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். குறித்த நபரிடமிருந்து இரண்டரை கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

அமரன் 100 நாள் வெற்றி கொண்டாட்டம்.. வருவாரா கமல்.?

  • January 8, 2025
  • 0 Comments

கடந்த வருடம் வெளிவந்த படங்களில் எதார்த்தமாகவும் மனதை தொடும் விதமாகவும் அமைந்தது சில படங்கள் தான். அதில் அமரன் படத்திற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இப்படத்தில் நடித்திருந்தனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பதிவு தான் இப்படம். இதில் ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்களும் சாய் பல்லவியின் நடிப்பும் சிவகார்த்திகேயனின் ஆக்சனும் வேற லெவலில் இருந்தது. அதனாலயே பார்வையாளர்கள் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். கடந்த […]

வட அமெரிக்கா

நியூயார்க்கிலிருந்து புளோரிடாவுக்குச் சென்ற விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2 சடலங்கள்

  • January 8, 2025
  • 0 Comments

நியூயார்க்கிலிருந்து புளோரிடாவுக்குச் சென்ற JetBlue விமானத்தின் தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியில் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்தது. நேற்று முன்தினம் இந்த விமானத்தில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. சடலங்களின் அடையாளங்கள் தெரியவில்லை. விமானம் தரையிறங்கிய பிறகு நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின்போது அவை கண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் எப்படி தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியினுள் நுழைந்தனர், அவர்களது அடையாளம் ஆகியவை விசாரிக்கப்படுகின்றன. ஆவணமற்ற குடியேறிகள் சில சமயம் அவ்வாறு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இலங்கை செய்தி

இலங்கையில் பதிவு செய்யப்படாத கைப்பேசிகள் இம்மாதத்துடன் செயலிழக்கும்

  • January 8, 2025
  • 0 Comments

கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்வதற்கு வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடையவுள்ளது. கால அவகாசம் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தங்களது ஆணைக்குழுவில் IMEI இலக்கத்தைப் பதிவு செய்யாத கைத்தொலைபேசிகளில் குறித்த கால அவகாசத்தின் பின்னர் தொலைபேசி வலையமைப்பு இயங்காது என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் IMEI இலக்கத்தைப் பதிவு செய்தவர்களுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது எனவும் இலங்கை […]