செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பற்றி எரியும் வீடுகள் – தீயணைப்பாளரை போல வேடமிட்ட திருடன்

  • January 13, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் மாலிபு நகரில், காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட வீட்டில் திருடச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் தீயணைப்பாளரைப் போல வேடமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 12 பேரில் அவரும் ஒருவராகும். தீயில் சேதமடைந்த வீட்டினுள் திருட்டில் ஈடுபட்டபோது அவர் பிடிபட்டார். எத்தகைய நெருக்கடி நிலையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த காத்திருக்கும் நபர்கள் இருக்கிறார்கள் என்று லாஸ் ஏஞ்சலிஸ் பொலிஸார் எச்சரித்துள்ளனர். காட்டுத் தீயில் குறைந்தது 16 பேர் […]

இலங்கை செய்தி

இலங்கையில் இறக்குமதி வாகனங்களின் மொத்த வரி 500 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம்

  • January 13, 2025
  • 0 Comments

இலங்கையில் வாகனங்களுக்கான மொத்த வரியானது 500 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னர் இந்த அளவு அதிகரிக்கும் என சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வருடத்திற்குள் 50 ஆயிரம், வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நிலவிய வாகன இறக்குமதிக்கான தடையைத் […]

செய்தி வாழ்வியல்

HMPV வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்!

  • January 13, 2025
  • 0 Comments

HMPV-ஹியூமன் மெடா நியூமோ வைரஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் 200 முதல் 400 ஆண்டுகளுக்கு முன் பறவைகளில் தோன்றியதாகவும் அதன் பிறகு சூழலுக்கு ஏற்ப இந்த வைரஸ் தன்னை தகவமைத்து கொண்டதாகவும் தற்போது இது பறவைகளை பாதிப்பதில்லை என்றும் சையின்ஸ் டைரக்ட் என்ற மருத்துவ கட்டுரைகளுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்கும் என்று அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இணைய வசதிகளை மேலும் வேகப்படுத்த நடவடிக்கை

  • January 13, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பொதுமக்களுக்கு வேகமான, நம்பகமான மற்றும் மலிவு விலையில் இணைய அணுகலை வழங்குவதற்காக மத்திய அரசு ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஒரு அறிக்கையில், அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய பிராட்பேண்ட் நெட்வொர்க்கில் 3 பில்லியன் டாலர்களைச் சேர்க்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். Fibre- to-node வலையமைப்புகளை மேம்படுத்தவும், நாடு முழுவதும் 622,000 கூடுதல் பைபர் அணுகல் இணைப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதுப்பிப்புகள் 2030 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

விண்டோஸ் 10 பயனர்களுக்கு எச்சரிக்கை – நெருங்கும் ஆபத்து

  • January 13, 2025
  • 0 Comments

மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கான ஆதரவை 2025 அக்டோபர் 14-ம் திகதியுடன் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விண்டோஸ் 10 பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. ஏனெனில், இந்த தேதிக்குப் பிறகு, விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு எந்தவிதமான பாதுகாப்பு புதுப்பிப்புகளோ அல்லது தொழில்நுட்ப ஆதரவோ மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து கிடைக்காது. இது, சைபர் குற்றவாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து, பயனர்களின் கணினிகளை இலகுவாக ஹேக் செய்ய வழிவகுக்கும் என்று […]

இலங்கை செய்தி

இலங்கை 119 இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி பொலிஸாரை தவறாக வழிநடத்த முயன்ற நபர்

  • January 13, 2025
  • 0 Comments

இலங்கை பொலிஸாரின் துரித இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தி பொலிஸாரை தவறாக வழிநடத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றம், பொலிஸாருக்கு இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் 119 என்ற துரித இலக்கத்திற்கு 12 தடவைகள் அழைப்பை ஏற்படுத்தி, பொலிஸாரை தவறாக வழிநடத்த முயன்றுள்ளார். திருப்பனே – பெதிஸ்ரம்பேவ பகுதியில் வசிக்கும் ஒருவரையே இவ்வாறு கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர், கடந்த டிசம்பர் மாம் 18 […]

செய்தி விளையாட்டு

ஐபிஎல் தொடர் ஆரம்பம் – திகதியை அறிவித்த BCCI

  • January 13, 2025
  • 0 Comments

2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் திகதி தொடங்கும் என BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற BCCIசிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பின், செய்தியாளர் சந்திப்பில் 18-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கும் திகதியை உறுதிப்படுத்தினார். மேலும் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்தில் BCCI-யின் புதிய செயலாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி தலைவராக ஜெய்ஷா பதவியேற்ற நிலையில், BCCI சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் செயலாளராக தேவஜித் […]

இலங்கை

இலங்கையில் புளிக்கு கடுமையான தட்டுப்பாடு – ஒரு கிலோ புளி 2000 ரூபாய்

  • January 13, 2025
  • 0 Comments

இலங்கை சந்தையில் புளிக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, ஹட்டனில் ஒரு கிலோ புளி 2000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்க வேண்டியுள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் ஒரு கிலோ புளி, நேற்று 2,000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதியில் புளிக்கான […]

செய்தி

பிரித்தானியாவில் 2 மாதங்களுக்கு முன் தொலைபேசியை தவறவிட்டவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

  • January 13, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள பனிச்சறுக்குத் தளத்தினுள் தவறுதலாக விழுந்த கையடக்கதொலைபேசி 2 மாதங்களின் பின்னர் அதன் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. 8 வாரங்களுக்கு பனியில் உறைந்திருந்த போதிலும் அது இயங்கியதால் உரிமையாளர் ஆச்சரியமடைந்துள்ளார். நவம்பரில் தளத்தினுள் சுமார் 60,000 லிட்டர் தண்ணீர் ஊற்றப்பட்ட பிறகு கைத்தொலைபேசி அங்கு சிக்கிக்கொண்டது. அது தளத்தின் கட்டுமானத்தில் உதவிய ஊழியரின் மகளுக்குச் சொந்தமானது. மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி எப்போதும் போல் செயல்படுவதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். தளத்தின் இரும்புக் கட்டமைப்பு மீது அது […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

சொந்த நாடுகளை விட்டு வெளியேறும் பணக்காரர்கள் – வேறு நாடுகளுக்கு குடிபெயரும் மில்லியனர்கள்

  • January 13, 2025
  • 0 Comments

உலகின் பல நாடுகளுக்கு குடிபெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை இந்தாண்டும் கணிசமாக உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் இந்த விடயம் தெரிவித்துள்ளது. உயர் வரிவிதிப்புக் கொள்கைகள், பொருளாதார அச்சுறுத்தல்கள், அரசியல் பதற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள், பாதுகாப்பு, சிறந்த வாழ்க்கைத் தரம், சிறந்த கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நாட்டு மில்லியனர்களும் வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். அந்த வகையில், கடந்தாண்டில் மட்டும் சுமார் 1,34,000 மில்லியனர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். இவர்கள் அமெரிக்கா, இத்தாலி, […]