இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் வீசும் ஈயோ புயல் : மின்வெட்டு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • January 24, 2025
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் புயல் எச்சரிக்கை அமுலில் உள்ளது. சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அயர்லாந்தின் கால்வேயில் இன்று காலை 5 மணிக்கு 114 மைல் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வேறு எங்கும் பயணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈயோ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த புயல் காரணமாக விமானங்கள், ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மின்வெட்டு சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.  

ஆசியா

சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா!

  • January 24, 2025
  • 0 Comments

சீனா சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சோதனையைச் சீனா வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளது. இது வரும் காலத்தில் மின்சார தேவையை இலகுவாக பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா அணுக்கரு இணைவு (nuclear fusion) பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது. ஈஸ்ட் எனப்படும் எக்ஸ்பெரிமெண்டல் அட்வான்ஸ்டு சூப்பர் கண்டக்டிங் டோகாமாக் எனப்படும் இதை ஆய்வாளர்கள் ‘செயற்கை சூரியன்’ என்றும் கூட அழைக்கிறார்கள். இந்த ஃப்யூஷன் எனர்ஜி ரியாக்டரில் உருவான பிளாஸ்மா […]

பொழுதுபோக்கு

நடிகர் ஜெயசீலனின் உயிரை பறித்த மஞ்சள் காமாலை நோய்..

  • January 24, 2025
  • 0 Comments

பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் அடியாட்கள் கூட்டத்தில் நடித்து பிரபலமான ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோய் தீவிரம் அடைந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவலை அறிந்த அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, போன்ற படங்களில் இவர் நடித்திருந்தார். 40 வயதாகும், இவர் கடந்த இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் […]

பொழுதுபோக்கு

ஆஸ்கர் ரேஸில் இருந்து நீக்கப்பட்டது கங்குவா… ஆடுஜீவிதமும் அவுட்….

  • January 24, 2025
  • 0 Comments

திரைத்துறையின் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இவ்விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 97-வது ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் 2-ந் தேதி அமெரிக்காவில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விருது விழாவுக்கான பரிந்துரைப் பட்டியலில் 10 இந்தியப் படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அதன் இறுதிப்பட்டியலில் என்னென்ன படங்கள் இடம்பெற்றிருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி […]

உலகம்

சீரற்ற வானிலை : கல்வியை இழந்த 242 மில்லியன் குழந்தைகள் – வறிய நாடுகளுக்கே அதிக பாதிப்பு!

  • January 24, 2025
  • 0 Comments

கடந்த ஆண்டு வெப்ப அலைகள், சூறாவளிகள், வெள்ளம் மற்றும் பிற தீவிர வானிலை காரணமாக 85 நாடுகளில் குறைந்தது 242 மில்லியன் குழந்தைகளின் பள்ளிப் படிப்பு தடைபட்டதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் காலநிலை ஆபத்துகள் காரணமாக உலகம் முழுவதும் பள்ளிக்குச் செல்லும் ஏழு குழந்தைகளில் ஒருவர் வகுப்பறைக்கு வெளியே வைக்கப்பட்டதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. ஆசியா மற்றும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கை – வாகனங்கள் மட்டுமல்ல மின்னணு உபகரணங்களின் விலைகளும் அதிரிக்கப்பட வேண்டும் : துணை அமைச்சர்!

  • January 24, 2025
  • 0 Comments

IMF நிபந்தனையின் காரணமாக, இறக்குமதிக்கு முன்பே வாகனங்களின் விலைகள் உயர்ந்துள்ளன என்று துணை நிதியமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார். குத்தகை நிறுவனங்களுக்கு சாதகமாக வாகன விலைகள் உயர்த்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை என்றும், NPP அரசாங்கம் முழு பொருளாதாரத்தின் செயல்பாட்டையும் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கிறது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு சாதகமாக அல்ல என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனவரி மாதத்தில் புகையிலை, மதுபானம், வாகனங்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் […]

இந்தியா

இந்தியா – குஜராத்தில் உலகின் மிகப்பெரிய தரவு மையத்தை அமைக்கவுள்ள முகேஷ் அம்பானி

  • January 24, 2025
  • 0 Comments

இந்தியப் பெருஞ்செல்வந்தரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உலகிலேயே ஆகப் பெரிய தரவு மையத்தை அமைக்கத் திட்டமிட்டு வருவதாக புளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது.அம்மையம் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் அமையவுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் என்விடியா (NVIDIA) நிறுவனத்திடமிருந்து ‘ஏஐ’ பகுதி மின்கடத்திகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சென்ற ஆண்டு அக்டோபரில் நடந்த என்விடியா ஏஐ உச்சநிலை மாநாட்டின்போது, இந்தியாவில் ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்க இணைந்து செயல்படவுள்ளதாக ரிலையன்சும் என்விடியாவும் […]

பொழுதுபோக்கு

மலையாால சினிமாவில் “பணி” மற்றுமொரு மைல் கல்… படம் எப்படி?

  • January 24, 2025
  • 0 Comments

மலையாளத்தில் வரவேற்பை பெற்று வரும் படங்களில் பணி என்ற படம் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. பழிவாங்கும் ஒரு கதையை வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் கையாண்டிருக்கிறார் படத்தோட இயக்குநர். படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் மலையாளத்தில் சொல்ல வேண்டும் என்றால் அடிபோளி. ரொம்ப அற்புதம். எந்தவித சண்டை காட்சிகள் இல்லை. ஆனால், முக பாவத்தை நடிப்பு ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இப்படியொரு கிளைமேக்ஸ் காட்சிகளை எந்தப் படத்திலும் பார்த்திருக்க […]

வட அமெரிக்கா

சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் முதல் கட்ட வரிகள் அடுத்த வாரம் அறிவிப்பு

  • January 24, 2025
  • 0 Comments

சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் முதல் கட்ட வரிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பதவியேற்ற முதல் நாளிலேயே, சீன இறக்குமதிகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப் போவதாக அவர் எச்சரித்தார். இருப்பினும், ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​சீனா மீது 60 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை விதிப்பதாக டிரம்ப் உறுதியளித்தார். இருப்பினும், வரி விதிப்பு தொடர்பான எந்த நிர்வாக உத்தரவுகளிலும் டிரம்ப் கையெழுத்திடவில்லை. இந்த வரிகள் பெப்ரவரி முதலாம் திகதி […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

340,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு

  • January 24, 2025
  • 0 Comments

இலங்கையர்கள் 340,000 பேருக்கு இந்த வருடத்தினுள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் 311,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக செல்லும் இலங்கையர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.