உலகம்

ஈராக் கடல் எல்லைக்குள் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல்

ஈராக் கடல் எல்லைக்குள், எரிபொருள் ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

சுமார்  2 மில்லியன் பீப்பாய் அளவுள்ள பனாமா கொடியுடன் பயணித்த எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கப்பலில் இருந்த 22 பணியாளர்களில் யாருக்கும் பாதிப்போ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் ஈராக் துறைமுக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளையில், வளைகுடாப் பகுதியில் பல வணிகக் கப்பல்கள் இரவு நேரத்தில் தாக்குதலுக்கு உள்ளாகிச் செயலிழக்கச் செய்யப்பட்டதாக பிரித்தானிய கடற்படையுடன் தொடர்புடைய UKMTO அமைப்பு தெரிவித்தது.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் போர்ட் ரஷீத் (Port Rashid) பகுதியிலிருந்து 24 கடல் மைல் தொலைவில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்ததாகவும், UKMTO அமைப்பு தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்