இலங்கை

இலங்கையில் மீளவும் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு : மின்சார சபையின் அறிவிப்பு!

  • February 12, 2025
  • 0 Comments

இலங்கையில் நாளை (13) அமல்படுத்தப்படும் மின்வெட்டு குறித்து நாளை காலை அறிக்கை வெளியிடப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதால், மின்வெட்டு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமும் செயலிழந்தது. இதன் விளைவாக, தேசிய மின் கட்டமைப்பு […]

மத்திய கிழக்கு

காசா போர் நிறுத்தம் தோல்வியடைந்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்; ஏமனின் ஹவுத்தி தலைவர் எச்சரிக்கை

  • February 12, 2025
  • 0 Comments

காசா போர் நிறுத்தத்தை மீறினால் இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தனது குழு தயாராக இருப்பதாக ஏமனின் ஹவுத்தி தலைவர் அப்துல்-மாலிக் அல்-ஹவுத்தி செவ்வாயன்று எச்சரித்தார். தொலைக்காட்சி உரையில் அல்-ஹவுத்தி பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கைகளுக்கு எதிராக அரபு மற்றும் இஸ்லாமிய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார் மற்றும் பாலஸ்தீனியர்களை இடம்பெயர்க்கும் எந்தவொரு திட்டத்தையும் கண்டித்தார். “தற்போதைய கட்டம் அரபு மற்றும் இஸ்லாமிய ஒற்றுமையின் கட்டமாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார், மேலும் “காசா மக்களை […]

ஆசியா

சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் அபாயம் – வெளியான அதிர்ச்சி தகவல்

  • February 12, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் பெண் உள்பட மூன்று பேரை சிங்கப்பூர் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்ட அமைச்சர் சண்முகம் செய்தியாளர்களுடன் பேசியதாவது: ”தீவிர வலதுசாரி சித்தாந்தங்களை பின்பற்றும் மூன்றாவது இளைஞர் பயங்கரவாத சதித் திட்டத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். சீன மற்றும் மலேசிய […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

யாழில் அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நபர்

  • February 12, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தன் மீது தாக்குதல் நடாத்தியதாக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ். நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற வேளை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தன்னுடன் வாக்குவாதப்பட்டு, தன்னை பீங்கானால் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். […]

பொழுதுபோக்கு

வருகின்றது மூக்குத்தி அம்மன் 2 – சுந்தர் சி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • February 12, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் தற்போது டாப் கியரில் சென்றுகொண்டிருக்கும் இயக்குனர் என்றால் அது சுந்தர் சி தான். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது. தொடர் வெற்றிகளால் உற்சாகத்தில் இருக்கும் சுந்தர் சி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது அவர் கைவசம் கேங்கர்ஸ் திரைப்படம் உள்ளது. இப்படத்தில் சுந்தர் சி உடன் வடிவேலுவும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகும் விமானங்கள் – 2 வாரங்களில் 3வது விபத்து

  • February 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் தனியார் விமானமொன்று மற்றொரு விமானத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விமானம் Scottsdale விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2.40 மணி வாக்கில் விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தில் தரையிறங்கிய தனியார் விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று தனியார் வளாகத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதியது. சம்பவத்தையடுத்து மூடப்பட்ட ஓடுபாதை இன்னும் சிறிது காலம் அப்படியே மூடப்பட்டிருக்கும் […]

செய்தி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் – இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி!

  • February 12, 2025
  • 0 Comments

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் சற்று விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.14 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.51 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

செய்தி வாழ்வியல்

உடலில் கொழுப்பு கட்டிகள் தோன்ற என்ன காரணம்?

  • February 12, 2025
  • 0 Comments

உடலில் கொழுப்பு கட்டிகள் (Lipomas) வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இவை பெரும்பாலும் பாதிப்பில்லாத, மென்மையான, கொழுப்பு அணுக்களால் நிரம்பிய கட்டிகள் ஆகும். இவற்றின் துல்லியமான காரணம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை, ஆனால் பின்வரும் காரணங்கள் இதற்கு பங்களிக்கலாம்: 1. மரபணு காரணிகள் கொழுப்பு கட்டிகள் பெரும்பாலும் குடும்ப வரலாற்றுடன் தொடர்புடையவை. மரபணு பரம்பரையாக இது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 2. வயது இவை பொதுவாக 40 முதல் 60 வயதுக்கு இடையிலான மக்களில் அதிகம் […]

வட அமெரிக்கா

காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்பும் டிரம்ப்

  • February 12, 2025
  • 0 Comments

காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. காஸாவை விட்டு வெளியேறும் பாலஸ்தீனர்களுக்கு அடைக்கலம் கொடுக்காவிட்டால் ஜோர்டான் நாட்டுக்கான நிதி உதவியை நிறுத்தப்போவதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாடினார். காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, மிகச் சிறந்த சுற்றுலா வாசஸ்தலமாக மாற்ற விரும்புவதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார். பாலஸ்தீனர்களை வெளியேற்றாமல் காஸாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதில் வளைகுடா நாடுகள் ஒருமித்த […]

வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி மீது கடும் கோபத்தில் போப் பிரான்சிஸ்

  • February 12, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப பதவி ஏற்ற பிறகு அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தி வருகிறார். இந்த நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அமெரிக்க ஆயர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் டிரம்ப் நிர்வாகத்தில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தோரை பெருமளவில் நாடு கடத்துவது பெரிய கண்டனத்திற்குரியது. புலம்பெயர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் திட்டம் அவர்களின் உள்ளார்ந்த கண்ணியத்தை இழக்கச் செய்து மிகவும் மோசமான முடிவுக்கு தள்ளிவிடும். புலம்பெயர்ந்தோரை கவனித்துக்கொள்வதுதான் […]