எரிபொருள் விலை உயர்வு – போர்த்துக்களில் போராட்டம்
ஐரோப்பா முழுவதும் எரிபொருள் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், போர்த்துக்கல் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் மக்கள் விலை உயர்வு எதிராக போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் 60 முதல் 100 வாகனங்கள் வரை பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்த்துக்கல் ஆட்டோமொபைல் கிளப்பின் (ACP) கணிப்புகளின்படி நேற்றைய தினம் ஒரு லீற்றர் டீசல் விலை டீசல் விலை 2.169 யூரோக்களாகவும், பெட்ரோல் விலை ஒரு லீட்டர் 2.142 யூரோக்களாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிக எரிபொருள் விலை கொண்ட நாடுகளில் போர்ச்சுகலும் ஒன்றாகும்.
21 ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலைகளைத் தொகுக்கும் thefuel-prices இணையதளம்வெளியிட்டுள்ள தகவலின் படி, எரிபொருள் விலை உயர்வில் போர்த்துக்கல் 19 ஆவது இடத்தில் உள்ளது.




