IMF இன் அடுத்த உதவிதொகை இலங்கைக்கு கிடைக்குமா : வரவு செலவு திட்டத்தை ஆராயும் குழுவினர்!
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு வர வேண்டிய தோராயமாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்த தொகை விடுவிக்கப்படுவதற்கும் வரவு செலவு திட்டத்திற்கும் இடையில் தொடர்பு உள்ளது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து சர்வதேச நாணய நிதியம் கருத்து வெளியிட்டுள்ளது. இலங்கையின் செழிப்பைப் பாதுகாப்பதற்கு, பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதும், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதும் முக்கியம், மேலும் பொறுப்பான நிதிக் கொள்கையை செயல்படுத்துவது அவசியம் என ஐ.எம்.எஃப் வலியுறுத்தியுள்ளது. […]













