இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரயிலில் இருந்த 182 பயணிகள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்

  • March 11, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடத்தப்பட்ட ரயிலில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கத் துணிந்தால் கொன்றுவிடுவோம் என்று பலுசிஸ்தான் விடுதலைப் படை (பி.எல்.ஏ) மிரட்டல் விடுத்துள்ளது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அனைத்து பணயக்கைதிகளும் கொல்லப்படுவார்கள் என்றும் அவர்கள் எச்சரித்தனர். கடத்தப்பட்ட ரயிலில் இருந்த 182 பயணிகள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். மேலும், 20 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலுசிஸ்தானின் கட்ச் மாவட்டத்தில் உள்ள அபேகாம் பகுதியில் பி.எல்.ஏ ஒரு ரயிலைக் கடத்தி, பயணிகளை பிணைக் கைதிகளாகப் […]

இலங்கை செய்தி

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 54 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

  • March 11, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 54 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரையில் பயிலும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட்ட உணவை உட்கொண்டமையால் மாணவர்களுக்கு நோய் நிலைமை ஏற்பட்டுள்ளது. 31 மாணவர்களுக்கு நோய் நிலைமை பதிவான நிலையில், சிற்றுண்டிச்சாலையில் உணவை உட்கொண்ட 53 மாணவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

ட்ரம்பிற்கு எதிராகத் திரும்பும் ஐரோப்பிய நாடுகள்?

  • March 11, 2025
  • 0 Comments

கிரீன்லாந்தில் இன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கிரீன்லாந்து மீது அமெரிக்கா நேரடி போருக்கு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடாக டென்மார்க் உள்ளது. டென்மார்க்கின் ஒருபகுதியாக கிரீன்லாந்து உள்ளது. இது டென்மார்க்கின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிரதேசமாகும். இந்நிலையில் கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில் அமெரிக்கா அங்கு போர் நடத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா […]

உலகம் செய்தி

வன்முறைக்கு காரணமானவர்கள் ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்படுவர் – சிரியாவின் புதிய ஜனாதிபதி

  • March 11, 2025
  • 0 Comments

சிரியாவின் கரையோர மாகாணங்களான டர்டாஸ், லடாக்கியாவில் வன்முறைக்கு காரணமானவர்கள் ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்படுவார்கள் என்று சிரியாவின் புதிய ஜனாதிபதி அஹமட் அல் சஹரா தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சியின் ஊடாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சாதாரண மக்கள் இரத்தம் சிந்தக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மோசமான விளைவுகளைச் சந்திப்பார்கள். இங்கே எல்லோரும் சட்டத்துக்கு முன் சமம். கலவரப் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிரிய மக்களின் […]

இலங்கை செய்தி

ரோயல் பார்க் கொலை; ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்திய மைத்திரி

  • March 11, 2025
  • 0 Comments

ரோயல் பார்க் கொலை வழக்கில் பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உத்தரவிடப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்திவிட்டதாக அவரது சட்டத்தரணிகள் இன்று (11) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற சமர்ப்பணங்களை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி தண்டனை விதிக்காததற்கான காரணங்களைக் குறிப்பிடுமாறு குறிப்பிட்டு இன்று காலை […]

இலங்கை செய்தி

நாட்டின் பல பகுதிகளுக்கு நாளையும் மழை

  • March 11, 2025
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இவ்வாறு மழை பெய்யும். அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை செய்தி

திருகோணமலையில் 15 வயதுடைய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம்

  • March 11, 2025
  • 0 Comments

திருகோணமலையில் 15 வயதுடைய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் முல்லைத்தீவில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் திருகோணமலையில் உள்ள மனைவியின் சித்தி வீட்டிற்கு போய்வருவது வழக்கமான நிலையில் சித்தியின் மகளான 15 வயதுடைய பாடசாலை மாணவியை அதிக நாட்களாக துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு உடநிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறித்த மாணவி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தபட்டபோது குறித்த […]

பொழுதுபோக்கு

ஜனநாயகன் படத்தில் இணைந்த மூன்று இயக்குனர்கள்… தளபதி கொடுக்கும் சர்ப்ரைஸ்

  • March 11, 2025
  • 0 Comments

தளபதி விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ளதால் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க உள்ளார். கடைசியாக விஜய் நடிப்பில் வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படம் தான் விஜய்யின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த சூழலில் இப்படத்தின் மூன்று பாடல்கள் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

கனடாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வர்த்தக போர் வெடித்தது! 

  • March 11, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா பொருட்களுக்கு 50 சதவீத வரிகளை விதிக்கும். கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியம் மீது 50 சதவீத வரியை விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியலில் இதை எழுதுகிறார். இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி கனடாவிலிருந்து வரும் இரும்பு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவார். கூடுதல் வரிகளை விதிக்குமாறு தனது வர்த்தக செயலாளரிடம் கேட்டுக் கொண்டதாகவும், இது […]

ஆசியா செய்தி

மொரீஷியஸ் ஜனாதிபதிக்கு மகா கும்பமேளா கங்கை நீரை வழங்கிய பிரதமர் மோடி

  • March 11, 2025
  • 0 Comments

இரண்டு நாள் பயணமாக மொரிஷியஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் தரம்பீர் கோகுலுக்கு மகா கும்பமேளா கங்கை நீரையும், மக்கானாவையும் பரிசாக அளித்தார். மொரீஷியஸ் அதிபர் தரம்பீர் கோகுலை, அரசு மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்தியா – மொரீஷியஸ் இடையே சிறப்பான மற்றும் நெருங்கிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாறும் மக்களுக்கு இடையே வலுவான […]