தொடர் நாயகனான ரச்சின் ரவீந்திரா – ICC முடிவால் கடுப்பான அஸ்வின்
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுவிட்டது. இதனை தொடர்ந்து இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஐசிசி சார்பாக விருது வழங்கப்பட்டது. குறிப்பாக, இந்த தொடரில் 263 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெயரை பெற்றுள்ள நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஐசிசி அவருக்கு இந்த விருதை கொடுத்திருக்க கூடாது வருண் சக்கரவர்த்திக்கு தான் அந்த விருதை கொடுத்திருக்கவேண்டும் […]













