ஐரோப்பா

17 ஆண்டுகளாக தொடர்ந்த சட்டப் போராட்டம் : ஒருவழியாக முடிவுக்கு வந்த வழக்கு!

  • May 21, 2026
  • 0 Comments

2009-ஆம் ஆண்டு ரியோ-பாரிஸ் விமான விபத்தில் 228 பேர் உயிரிழந்தமை தொடர்பில் ஏர்பஸ் மற்றும்  ஏர் பிரான்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது மனிதப் படுகொலைக் குற்றத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 17 வருடங்களாக இடம்பெற்று வருகிறது. இருப்பினும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் இரு நிறுவனங்களும் தலா €225,000 வரை அதிகபட்சமாக அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் 2023 […]

இலங்கை செய்தி

அடுத்த வாரத்தில் இருந்து வட்டி விகிதம் உயர வாய்ப்பு!! மக்கள் மீது விழும் சுமை!

  • May 21, 2026
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியானது வரும் வாரத்திற்குள் வட்டி விகிதத்தை  குறைந்தபட்சம் 50 அல்லது 100 அடிப்படைப் புள்ளிகள் அல்லது 0.5% அல்லது 01 சதவீதம்  வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  வட்டி விகிதங்கள் இவ்வாறு அதிகரித்தால், அதன் நேரடி விளைவாக மக்கள் மீது விதிக்கப்படும் வரிகளின் அளவை மேலும் அதிகரிக்க […]

உலகம் செய்தி

கியூபா தலைவர் மீது அடுக்கடுக்கடான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அமெரிக்கா

  • May 21, 2026
  • 0 Comments

1996 ஆம் ஆண்டு கியூபா மற்றும் புளோரிடா இடையே இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) மீது கொல்ல சதி உள்ளிட்ட பல புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. ‘பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ’ (Brothers to the Rescue) என்ற கியூபா மற்றும் அமெரிக்க அமைப்பின் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதில், மூன்று அமெரிக்கர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர். இந்நிலையில் விமானங்களை அழிக்க […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோரின் உண்மையான எண்ணிக்கை!! தவறான கண்ணோட்டத்தில் மக்கள்!

  • May 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நிகரக் குடியேற்றம் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2025-ஆம் ஆண்டு வரையிலான 12 மாதங்களில் இந்த எண்ணிக்கை 171,000 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இருந்தபோதிலும்,  கிட்டத்தட்ட பாதி பிரித்தானியர்கள் (49 சதவீதம்) நிகர குடியேற்றம் அதிகரித்துள்ளதாகத் தவறாக நம்புகிறார்கள். வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே உண்மையான சரிவைப் பற்றி அறிந்திருப்பதாக பிரிட்டிஷ் ஃபியூச்சர் (British Future) நடத்திய ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதேநேரம் […]

இலங்கை செய்தி

“போராட்டம் வெடிக்க முன் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கவும்” திகா எம்.பி. வலியுறுத்து

  • May 21, 2026
  • 0 Comments

“மலையக மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு முன்னர் காணி உரிமையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார். மலையக மக்களுக்கான காணி உரிமையின் அவசியத்துவத்தை வலியுறுத்தி ராதாகிருஷ்ணன் எம்.பியால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே திகாம்பரம் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் திகாம்பரம் எம்.பி. கூறியவை வருமாறு , “மலையக மக்களின் காணி பிரச்சினையென்பது நெடுநாள் […]

உலகம் செய்தி

ஈரான் நெருக்கடிக்கு ராஜதந்திர தீர்வே அவசியம் – ரஷ்யா

  • May 21, 2026
  • 0 Comments

ஈரானின் நலன்களை கருத்திற் கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Maria Zakharova, பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்படும் எந்த ஒப்பந்தத்தையும் நடைமுறைப்படுத்துவதில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு உதவ ரஷ்யா தயாராக இருப்பதாக கூறினார். மேலும், ஈரானின் யுரேனியம் கையிருப்புகள் குறித்து தீர்மானிக்கும் உரிமை முழுமையாக ஈரானுக்கே சொந்தமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை ஐரோப்பா செய்தி

கல்வி ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை, பிரிட்டன் ஆராய்வு!

  • May 21, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரிட்டன் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனைச் ( Bridget Phillipson) சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இதன்போது, நிறுவன ரீதியான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் அவதானம் செலுத்தினர். அத்தோடு, இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையில் கல்வித் துறையில் நிலவும் நீண்டகால, வரலாற்று ரீதியான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி, மாணவர் பரிமாற்றம் (Student mobility), […]

இலங்கை செய்தி

சீதனக் கொடுமை: யாழில் இளம் பெண் உயிர்மாய்ப்பு!

  • May 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த பெண், இளைஞர் ஒருவரை இரண்டு வருடங்களாகக் காதலித்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டார். எனினும், இவர்களது திருமணத்தைக் கணவனின் தாயார் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. திருமணத்தின் பின்னர், 25 பவுண் […]

இலங்கை செய்தி

யாழில் ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறை!

  • May 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு 7 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. யாழ்ப்பாணம் – பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தண்டனைக்குள்ளானவராவார். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாத பகுதியில், மேற்படி பெண் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார். அதன்போது அவரது உடைமையிலிருந்து 1 கிராம் 475 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு […]

இலங்கை ஐரோப்பா செய்தி

இலங்கையின் நல்லிணக்க முயற்சி குறித்து பிரிட்டனுக்கு பிரதமர் விளக்கம்!

  • May 21, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , அந்நாட்டு வெளிவிவகாரச் செயலாளர் Yvette Cooper ஐ சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, டித்வா சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் பின்னர், மீள்கட்டுமான மற்றும் மீட்சிப் பணிகளுக்காக பிரிட்டன் வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கைக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்பையும் பிரதமர் பாராட்டினார். இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, […]