இலங்கை செய்தி

அடுத்த வாரத்தில் இருந்து வட்டி விகிதம் உயர வாய்ப்பு!! மக்கள் மீது விழும் சுமை!

இலங்கை மத்திய வங்கியானது வரும் வாரத்திற்குள் வட்டி விகிதத்தை  குறைந்தபட்சம் 50 அல்லது 100 அடிப்படைப் புள்ளிகள் அல்லது 0.5% அல்லது 01 சதவீதம்  வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  வட்டி விகிதங்கள் இவ்வாறு அதிகரித்தால், அதன் நேரடி விளைவாக மக்கள் மீது விதிக்கப்படும் வரிகளின் அளவை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.

நிதி அமைச்சகம், மத்திய வங்கி மற்றும் திறைசேரி ஆகியவை சந்தைக் கொள்கைகளைக் கொண்டுள்ளன என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினர் அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இல்லையெனில், இந்தத் தீய சுழற்சி தொடர்ந்து நீடிக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

“அரசியல் மேடையில் எவ்வளவுதான் பேசப்பட்டாலும், அது பயனற்றது. சந்தை அரசாங்கத்தை நம்பவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கம் செலுத்த வேண்டிய வட்டியை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்பதே தற்போது நடந்து கொண்டிருக்கிறது,” என்று அவர் கூறினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!