இலங்கை

இலங்கையில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது நிறுத்தம்

  • May 18, 2025
  • 0 Comments

இலங்கையில் மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது. அதன்படி, பதிவு செய்யப்பட்ட செஸி இலக்கத்தை கொண்ட மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடுகளோ ஸ்டிக்கர்களோ வழங்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகனம் பதிவு செய்யும் போது இலக்கத் தகடுகள் […]

விளையாட்டு

தோனி ரசிகர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

  • May 18, 2025
  • 0 Comments

இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுகிறார். இந்த ஆண்டு அவர் தலைமையேற்கும் சி எஸ் கே அணி மிகமோசமாக விளையாடி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த முறை ருத்துராஜ் கேப்டனாக செயல்பட்ட நிலையில் பாதியிலேயே வெளியேறிவிட்டதால் அவருக்குப் […]

உலகம்

உலகளவில் பட்டினிச் சாவை எதிர் நோக்கியுள்ள 29.53 கோடி பேரின் பரிதாப நிலை

  • May 18, 2025
  • 0 Comments

உலகளவில் 29.53 கோடி பேர் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் தெரிவித்துள்ளன. “சா்வதேச உணவுப் பற்றாக்குறை அறிக்கை“ என்று பெயரிடப்பட்டு, அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான உணவு பற்றாக்குறை காரணமாக உலகம் முழுவதும் 29.53 கோடி பேர் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் ஆயுத மோதல்கள், மனிதாபிமான உதவிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டது, பருவநிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் […]

இன்றைய முக்கிய செய்திகள்

அமெரிக்காவை உலுக்கிய சூறாவளி – 27 பேர் மரணம் – 300,000 பேர் பாதிப்பு

  • May 18, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென வீசிய சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெண்ட்டக்கி, மிஸொரி மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிஸொரி மாநிலத்தின்செயின்ட் லூயிஸ் நகரில் மட்டும் சுமார் 5,000 கட்டடங்கள் சேதமாயின. மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட தடையால் 300,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். மக்கள் அடைக்கலம் நாடுவதற்கு நிவாரண நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். தற்போது கெண்ட்டக்கி, மிஸொரி ஆகியவற்றில் மீட்புப் பணி தொடர்கிறது.

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

மனித உருவ ரோபோக்கள் மனிதர்களுக்கு மாற்றாக இருக்காதென அறிவித்த நிபுணர்

  • May 18, 2025
  • 0 Comments

மனித உருவ ரோபோகள் மனிதர்களுக்கு மாற்றாக இருக்காதென என, சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையத்தின் துணைத் தலைவர் லியாங் லியாங் குறிப்பிட்டுள்ளார். ஹியூமனாய்டு எனப்படும் மனித உருவ ரோபோக்கள், பெருமளவில் வேலைவாய்ப்பின்மையை உருவாக்கும் என்பதால் மனிதர்களுக்கு மாற்றாக இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உருவ ரோபோக்களால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார். மனிதர்கள் பணியாற்ற முடியாத ஆபத்தான சூழல்களில் அவை செயல்படும் என தெரிவித்துள்ளார். விண்வெளி மற்றும் ஆழ்கடல் ஆய்வுகளில் இந்த மனித உருவ […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு

  • May 18, 2025
  • 0 Comments

இலங்கையின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

போர் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவு – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

  • May 18, 2025
  • 0 Comments

நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்படி வருடாந்தம் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் […]

உலகம்

லிபியாவில் 10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக குடியமர்த்த திட்டமிடும் ட்ரம்ப்

  • May 18, 2025
  • 0 Comments

லிபியாவில் பாலஸ்தீனியர்களில் நிரந்தரமாக குடியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 லட்சம் பேரை அவர் இவ்வாறு குடியமர்த்த திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக லிபியாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், பாலஸ்தீனியர்களை லிபியா ஏற்றுக்கொண்டால் அந்நாட்டின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார […]

இன்றைய முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை

  • May 18, 2025
  • 0 Comments

9ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. போலி அடையாளம் என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி அடையாளங்கள் ஒன்லைனில் வெளிப்படையாக விற்பனை செய்யப்படுவதாகவும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். போலி அடையாள அட்டைகளை விற்பனை செய்பவர்கள் 18 வயதுக்குட்பட்ட பயனர்களை குறிவைத்து, அடையாள அட்டை போலியானதா இல்லையா என்பதை அடையாளம் காணும் முக்கிய பாதுகாப்பு அம்சமான ஹாலோகிராமையும் போலியாக உருவாக்குவது தெரியவந்துள்ளது. இதுபோன்ற அடையாள அட்டைகளை விற்பனை செய்பவர்கள் அல்லது […]

இலங்கை செய்தி

இஸ்ரேலில் விசா காலாவதியாகிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு

  • May 18, 2025
  • 0 Comments

விசா காலாவதியாகியதன் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு காலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவரிடம் வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சரின் கோரிக்கையை இஸ்ரேல் அரசாங்கத்திடம் துரிதமாக முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் ஒப்புக்கொண்டதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் பல்வேறு துறைகளில் தற்போது பெருமளவான இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர். இலங்கையர்களுக்கு அதிக தொழில்வாய்ப்புகளை வழங்க இஸ்ரேல் அரசாங்கம் […]