12 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடை – அமெரிக்காவை கடுமையாக விமர்சித்த ஈரான்
ஈரான் உட்பட 12 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. இந்த விடயம் அந்நாட்டின் இனவெறி மனநிலையின் அடையாளம் என ஈரான் விமர்சித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார். இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அவர் தடை விதித்துள்ளார். அதற்கான பிரகடனத்தில் கடந்த புதன்கிழமை ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதற்கமைய, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ […]













