இலங்கையில் ரம்புட்டான், மங்குஸ்தான் தோல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மருத்துவர் எச்சரிக்கை
ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் தோல்கள், டெங்கு நுளம்புகளுக்கான இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்கும் அபாயம் உள்ளதாக வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார். பல்வேறு பகுதிகளில் இந்த பழங்களின் தோல்களை வீதியோரங்களில், வீடுகளின் பின்புறங்களில் அல்லது திறந்த வெளிகளில் அங்கிங்கித்தமாக வீசுவதை அவதானிக்க முடிகிறது. இது குறைந்த அளவிலான நீர்தேக்கம் ஏற்படுவதற்கும், அதன்வழி டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கும் காரணமாகிறது. வைத்தியர் தீபால் பெரேரா இதுகுறித்து மேலும் கூறுகையில், டெங்கு நுளம்புகள் வளர சிறிதளவான நீர் […]













