உலகம் செய்தி

பிரபல மியான்மர் மோசடி உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதித்த சீனா

  • November 4, 2025
  • 0 Comments

தென்கிழக்கு ஆசியாவில் மோசடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மியான்மரின் பாய் மாஃபியாவின்(Bai mafia) ஐந்து உறுப்பினர்களுக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குறிப்பாக மனித கடத்தல் மற்றும் மோசடி துறையில் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. ஷென்சென்(Shenzhen) இடைநிலை மக்கள் நீதிமன்றம், 21 பேரை கொண்ட மாஃபியாவின் தலைவரான பாய் சூச்செங்(Bai Xucheng) மற்றும் அவரது மகன் பாய் யிங்காங்(Bai Yinggang) மற்றும் மூன்று கூட்டாளிகளான […]

உலகம் செய்தி

நவம்பர் 18ம் திகதி டிரம்பை சந்திக்கும் சவுதி பட்டத்து இளவரசர்

  • November 4, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன்(Donald Trump) அதிகாரப்பூர்வமாக ஒரு சந்திப்பை நடத்துவதற்காக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்(Mohammed bin Salman) இந்த மாத இறுதியில் வாஷிங்டனுக்கு வருகை தருவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஏழு ஆண்டுகளில் அமெரிக்க தலைநகருக்கு சவுதி அரேபியா இளவரசரின் இரண்டாவது வருகை இதுவாகும். இஸ்ரேல்Israel), ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(United Arab Emirates), பஹ்ரைன்(Bahrain), சூடான்(Sudan) மற்றும் மொராக்கோ(Morocco) உள்ளிட்ட பல அரபு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்காக […]

இலங்கை செய்தி

இலங்கையின் முன்னாள் மீன்வள கூட்டுத்தாபன தலைவர் உட்பட 4 அதிகாரிகள் கைது

  • November 4, 2025
  • 0 Comments

இலங்கை மீன்வளக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் லலித் தௌலகல(Lalith Dhaulagala) மற்றும் மூன்று அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020ம் ஆண்டு இலங்கை மீன்வளக் கூட்டுத்தாபனத்திற்காக தேவையற்ற நேரத்தில் மணிக்கு 2,000 கிலோ மீன்களை பொதியிடும் அதிக திறன் கொண்ட பொதியிடல் இயந்திரத்தை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, இதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 5,856,116 இழப்பை ஏற்படுத்தியதற்காக ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வெடித்த எரிவாயு சிலிண்டர் – 12 பேர் காயம்

  • November 4, 2025
  • 0 Comments

இஸ்லாமாபாத்தில்(Islamabad) உள்ள பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற கட்டிடத்தின் அடித்தள சிற்றுண்டிச்சாலையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் ஏர் கண்டிஷனிங்கை(குளிரூட்டி) பழுதுபார்க்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், “குளிரூட்டியை பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மிகவும் கடுமையான காயங்களுக்கு ஆளானதாகவும், ஒரு தொழில்நுட்ப வல்லுநரின் உடலில் 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்லாமாபாத்தின் காவல்துறைத் தலைவர் அலி நசீர் ரிஸ்வி(Ali Nazir Rizvi) […]

இந்தியா செய்தி

சத்தீஸ்கர் ரயில் விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு(Update)

  • November 4, 2025
  • 0 Comments

இந்தியாவின் சத்தீஸ்கர்(Chhattisgarh) மாநில தலைநகர் ராய்ப்பூரில்(Raipur) பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. “இந்த விபத்தில் மொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் இன்னும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். 17 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று பிலாஸ்பூர்(Bilaspur) மாவட்ட ஆட்சியர் சஞ்சய் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஏனைய பயணிகளுக்கு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இணைய மோசடியாளர்களுக்கு பிரம்படி தண்டனையை அறிமுகப்படுத்தும் சிங்கப்பூர்

  • November 4, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில்(Singapore) இணைய மோசடி செய்பவர்களுக்கு குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து குறைந்தபட்சம் 06 முதல் 24 பிரம்படிகள் வரை தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட சிங்கப்பூர் 2020 முதல் 2025ம் ஆண்டின் முதல் பாதி வரை மோசடிகள் மூலம் $2.8 பில்லியனுக்கும் அதிகமாக இழந்ததாக உள்துறைக்கான மூத்த துணை அமைச்சர் சிம் ஆன்(Sim Ann) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “மோசடிகளைச் செய்யும் குற்றவாளிகள், முக்கியமாக தொலைதூரத் தொடர்பு மூலம் ஏமாற்றுபவர்கள் குறைந்தது […]

இந்தியா செய்தி

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேர் கைது

  • November 4, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில்(Coimbatore) உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை 20 வயது கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகளுடனான ஒரு சிறிய மோதலுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட தவசி, கார்த்திக் மற்றும் காளீஸ்வரன் கால்களில் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி தனது ஆண் நண்பருடன் இருந்த போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆண் நண்பரைத் தாக்கி காரில் […]

உலகம் செய்தி

மீட்புப் பணியின் போது விபத்துக்குள்ளான பிலிப்பைன்ஸ் விமானப்படை ஹெலிகாப்டர்

  • November 4, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸின்(Philippines) தெற்கில் ஐந்து பணியாளர்களுடன் சென்ற விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி(Kalmaegi) புயலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையின் போது தெற்கு அகுசன் டெல் சுர்(Agusan del Sur) மாகாணத்தில் உள்ள லோரெட்டோ(Loreto) நகருக்கு அருகே சூப்பர் ஹூய்(Super Huey) ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், விமானப்படை வீரர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஐந்து விமானப்படை வீரர்களின் நிலை மற்றும் விபத்துக்கு என்ன காரணம் என்பது உட்பட […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகர்களின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • November 4, 2025
  • 0 Comments

நடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மணிரத்னம் வீடுகளுக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில், “சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரிஷா வீடு, அண்னாநகர் பகுதியில் உள்ள விஷால், மணிரத்னம் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து காவலர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அங்கு வெடிகுண்டுகள் ஏதும் இல்லாததால் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. […]

செய்தி விளையாட்டு

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சிறந்த அணியை அறிவித்த ICC

  • November 4, 2025
  • 0 Comments

கடந்த வாரம் இந்தியாவின் நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில், நடந்து முடிந்த தொடரின் சிறந்த வீராங்கனைகள் கொண்ட அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) அறிவித்துள்ளது. அந்த வகையில், அணியின் தலைவராக தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வோர்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த அணியில் இந்தியா(India), தென் ஆப்பிரிக்கா(South Africa) […]