பிரபல மியான்மர் மோசடி உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதித்த சீனா
தென்கிழக்கு ஆசியாவில் மோசடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மியான்மரின் பாய் மாஃபியாவின்(Bai mafia) ஐந்து உறுப்பினர்களுக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குறிப்பாக மனித கடத்தல் மற்றும் மோசடி துறையில் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த தீர்ப்பு வந்துள்ளது. ஷென்சென்(Shenzhen) இடைநிலை மக்கள் நீதிமன்றம், 21 பேரை கொண்ட மாஃபியாவின் தலைவரான பாய் சூச்செங்(Bai Xucheng) மற்றும் அவரது மகன் பாய் யிங்காங்(Bai Yinggang) மற்றும் மூன்று கூட்டாளிகளான […]













