உலகம்

வாகன டயர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பெரும் அபாயம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

  • November 5, 2025
  • 0 Comments

வாகனங்களுக்குப் பயன்படுத்தும் டயர்கள் காரணமாக மனிதர்களுக்கு பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படலாம் என ஆய்வொன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது. வாகன டயர்கள் தேய்மானம் அடையும் போது, சுமார் 50,000 தொன் நச்சுப் பொருட்கள் காற்று, மண் மற்றும் நீரில் கலக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய சந்தையில் உள்ள பிரிட்ஜ்ஸ்டோன், மிச்செலின் உள்ளிட்ட ஆறு முக்கிய டயர் தயாரிப்புகளின் கலவை பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதன்போது மொத்தம் 1,954 மூலக்கூறுகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 785 மூலக்கூறுகள் “கடுமையான உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் […]

உலகம் செய்தி

நியூயார்க்கின் (New York) முதல் முஸ்லிம் மேயராக தெரிவான சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani)!

  • November 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க் (New York)  நகர மேயராக ஜனநாயகக் கட்சி வேட்பாளரான 34 வயதான சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயார்க்கின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் ஆட்சியாளர் இவராவார். இந்தோ-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மம்தானி (Mamdani) , பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் மீரா நாயரின் மகனும் ஆவார். மம்தானியை “யூத வெறுப்பாளர்” என்று ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை வர்ஜீனியா (Virginia) மற்றும் நியூ ஜெர்சியில்  […]

இலங்கை

பொதுஜன பெரமுன, ஐ.தே.க கூச்சல் குறித்து பொன்சேகா அதிருப்தி

  • November 5, 2025
  • 0 Comments

” மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிபீடமேறுவதற்கு இடமளிக்க கூடாது. இந்நாட்டை நாசமாக்கிய தரப்புகள் இணைந்து நடத்தும் நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்குமளவுக்கு நான் முட்டாள் அல்லன்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட மேலும் சில கட்சிகள் இணைந்து நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பொன்சேகா […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

பார்த்துக்கொண்டே இருக்கலாம் சமந்தாவின் அழகை…

  • November 5, 2025
  • 0 Comments

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நீல நிறத்தில் உடலை ஒட்டியபடி ஒரு உடையுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. பாலிவூட் நடிகைகளுக்கு நிகராக டைட்டான உடையை அணிந்துக் கொண்டு நடிகை சமந்தா போஸ் கொடுத்தாலும், கவர்ச்சியாக இல்லை. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன.

இலங்கை

நுகேகொடை பேரணி குறித்து ராஜித அதிருப்தி – பங்கேற்பது பற்றி இறுதி முடிவில்லை!

  • November 5, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பது தொடர்பில் தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மேற்படி பேரணிக்கு ஆதரவை வழங்கும் முடிவை கட்சி எடுத்திருந்தாலும், அது பற்றி தான் இன்னமும் பரிசீலித்துவருவதாகவும் ஊடக சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார். “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துவருகின்றனர். எனவே, எதிரணி வசம் சிறந்த மாற்று […]

உலகம்

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி – 66 பேர் மரணம்

  • November 5, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸை ஒரு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய மிக வலிமையான சூறாவளி இது என்று கூறப்படுகிறது. குறைந்தது 66 பேர் உயிரிழந்துள்ளனர். 400,000 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மக்கள் வசிக்கும் நகரங்கள் உட்பட பெரிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், சூறாவளி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரையிலான அறிக்கைகளின்படி, இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

இலங்கை

இலங்கையில் தொழிற்சாலையில் விபத்து – இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

  • November 5, 2025
  • 0 Comments

மஸ்கெலியா, மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி, தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். 4 பிள்ளைகளின் தந்தையான கிட்ண்ணன் விஜயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகைதந்து ஆராய்ந்த பிறகு , சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சட்ட […]

உலகம் செய்தி

டுபாயில் விற்பனையாகும் உலகின் மிக விலையுயர்ந்த கோப்பி – அதிர்ச்சியை ஏற்படுத்திய விலை

  • November 5, 2025
  • 0 Comments

உலகிலேயே மிக விலையுயர்ந்த கோப்பி, தற்போது டுபாயில் கபேகளில் விற்பனை செய்யப்படுகிறன. பனாமாவிலுள்ள உயர் ரகத்திலான கோப்பி கொட்டைகளிலிருந்து இவை பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது. டுபாயில் ஒரு கோப்பை கோப்பி 3,600 திர்ஹாமிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகளவான கொள்வனவாளர்கள் முன்னிலையில் உயர்தரத்திலான கோப்பிக் கொட்டைகள் ஏலம் விடப்படும். பல மணிநேரம் காத்திருந்து அதனை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அதற்கமைய ஏலத்தில் 2 கிலோ கோப்பி கொட்டைகள், சுமார் 2.2 மில்லியன் திராமிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு […]

உலகம்

சிங்கப்பூர் தொழில் சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி

  • November 5, 2025
  • 0 Comments

சிங்கப்பூர் சந்தையில் வேலைவாய்ப்பு பெரியதொரு நெருக்கடியாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தொழில்நுட்பம் உட்பட சில துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனினும், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உலகப் பொருளாதாரம் மெதுவாகச் சென்று கொண்டிருப்பதால், வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது. சிங்கப்பூரில் மொத்த வேலைகளின் எண்ணிக்கை மூன்று வீதம் கூடியுள்ளதாக லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. அதேவேளை, வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக, 11 வீதம் அதிகரித்துள்ளது. இந்த […]

உலகம்

சீனாவில் சிறுவனுக்கு எமனாக வந்த பானம் – பெற்றோர் விடுத்துள்ள எச்சரிக்கை

  • November 5, 2025
  • 0 Comments

சீனாவில் பானத்திற்குள் இருந்து உருண்டை ஒன்று மூச்சுக்குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது. சம்பவத்தில் மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுவன் பருகிய பபுள் டீ (Bubble Tea) பானத்தில் இருந்த ‘போபா’ உருண்டையே அவனுக்கு எமனாக மாறியுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். தமது பிள்ளையின் மரணத்திற்கு பானத்தை விற்பனை செய்த கடை மற்றும் அந்தக் கடைத்தொகுதி ஆகிய இரண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று சிறுவனின் பெற்றோர் குற்றம் […]