உலகம் செய்தி

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வெடித்த எரிவாயு சிலிண்டர் – 12 பேர் காயம்

Gas cylinder explodes in Pakistan Supreme Court, injuring 12

இஸ்லாமாபாத்தில்(Islamabad) உள்ள பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற கட்டிடத்தின் அடித்தள சிற்றுண்டிச்சாலையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் ஏர் கண்டிஷனிங்கை(குளிரூட்டி) பழுதுபார்க்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், “குளிரூட்டியை பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மிகவும் கடுமையான காயங்களுக்கு ஆளானதாகவும், ஒரு தொழில்நுட்ப வல்லுநரின் உடலில் 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்லாமாபாத்தின் காவல்துறைத் தலைவர் அலி நசீர் ரிஸ்வி(Ali Nazir Rizvi) குறிப்பிட்டுள்ளார்

மேலும், பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்திலும் (PIMS) ஒன்பது பேர் பாலிகிளினிக்(Polyclinic) மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி