'டித்வா' சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீக்கம்

  • July 1, 2026
  • 0 Comments

‘டித்வா’ சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தினார். “டித்வா’ சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, எதிர்க்கட்சிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே அவசரகால நிலையை நடைமுறைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த அவசரகாலச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனக் […]

ஐரோப்பா

லாவா குழம்புகளை வெளியேற்றி வரும் எட்னா எரிமலை

  • July 1, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் மிகவும் சுறுசுறுப்பான  எட்னா எரிமலை தற்போது எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இந்த எரிமலை கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதியன்று 3,000 மீட்டர் உயரத்தில் வெடித்து சிதறியது. இந்நிலையில் தற்போது  எரிமலை குழம்புகளை வெளியேற்றிவருகிறது. இந்த காட்சி ட்ரோன் மூலம் படமாக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் சிசிலியில் உள்ள எட்னா மலையில் அடிக்கடி வெடிப்புகள் ஏற்பட்டாலும், இந்த நிகழ்வுகள் பொதுவாக உள்ளூர் மக்களுக்கு இடையூறாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ இருப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு 10,000 சாரதிகளுக்கு அபராத புள்ளிகள்

  • July 1, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு இங்கிலாந்தில், சாலையில் ஓட்டுவதற்குப் பாதுகாப்பற்ற வாகனங்களை ஓட்டிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாரதிகள் பிடிபட்டுள்ளனர். சாரதி மற்றும் வாகன உரிம முகமையின் தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டப்பட்ட ஆய்வின்படி, பழுதடைந்த பிரேக்குகள், பழுதடைந்த டயர்கள், ஸ்டீயரிங் மற்றும் பிற தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ள வாகனங்களை ஓட்டியதற்காக 2025ம் ஆண்டில் 10,054 சாரதிகளுக்கு அபராதப் புள்ளிகள் வழங்கப்பட்டன. புள்ளிவிவரங்களின்படி, இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 3,055 குறைவாகும். இருப்பினும், வாகனங்கள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டதாலா அல்லது சாலைகளில் போக்குவரத்து […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு தனிப்பட்ட முறையில் போர் பயிற்சிகளை வழங்கிய சீனா – கசிந்த ஆவணம்

  • July 1, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு ரஷ்ய படைகளுக்கு சீனா தனிப்பட்ட முறையில் போர் பயிற்சி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயிற்சிக்காக ஜனாதிபதி  விளாடிமிர் புட்டினின் பாதுகாப்பு அமைச்சர் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்திருந்ததாகவும், குறைந்தது நான்கு ரஷ்ய மற்றும் சீனத் தளபதிகள் நேரடியாக பயிற்சி அளித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது மேற்கத்தேய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் சீனா உதவிக் கரம் நீட்டுவதையும், ஆதரவளிப்பதையும் வெளிச்சம்போட்டு காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் பயிற்சி பற்றிய அறிவிப்புகளை […]

இஸ்ரேல் தனது தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயார் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது மீண்டும் தாக்குதல் – இஸ்ரேல் எச்சரிக்கை

  • July 1, 2026
  • 0 Comments

இஸ்ரேல் தனது தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயார் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் Israel Katz எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே இருமுறை ஈரான் மீது ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தேவைப்பட்டால் மூன்றாவது முறையாகத் தாக்குதல் தொடரும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தூதரக முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், இஸ்ரேலிய சமூகங்களைப் பாதுகாக்க லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் […]

ஐரோப்பா

போலந்து மற்றும் உக்ரைனுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சி?

  • July 1, 2026
  • 0 Comments

போலந்து மற்றும் உக்ரேனியர்களுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா முன்னெடுக்கும் நாசவேலைகளை எதிர்கொள்ள தயாராகி வருவதாக போலந்தின் சிறப்பு சேவைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் டோமாஸ் சீமோனியாக் (omasz Siemoniak) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “போலந்துக்கும் உக்ரேனுக்கும் இடையே ஏற்படக்கூடிய மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்குவதே ரஷ்யாவின் கனவாகவும், ரஷ்ய சேவைகளின் கனவாகவும் இருந்தது, இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பரந்த அளவில், போலந்து மற்றும் பால்டிக் […]

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு - ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 6.8 வீதமாக அதிகரித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் ஜுன் மாத பணவீக்கம் அதிகரிப்பு

  • July 1, 2026
  • 0 Comments

இலங்கையில் ஜுன் மாதத்துக்குரிய பணவீக்கம் அதிகரித்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு – ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 6.8 வீதமாக அதிகரித்துள்ளது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவரங்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், 5.5 வீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதம், 1.3 வீதத்தினால் […]

A severe heatwave that has gripped Europe has killed more than 1,000 people in Spain, officials say. ஐரோப்பா செய்தி

வெப்ப அலை: ஸ்பெயினில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

  • July 1, 2026
  • 0 Comments

ஐரோப்பாவை வாட்டி வதைத்த கடுமையான வெப்ப அலையினால் ஸ்பெயினில் 1,000 இற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான முதல் ஆறு மாதங்களை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. இந்த வெப்ப அலையின் போது, வெப்பம் சார்ந்த உடல்நலப் பாதிப்புகளால் குறைந்தது 1,028 பேர் உயிரிழந்துள்ளதாக பொது Carlos III சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய வானிலை முகவாண்மையான ஏமெட் (Aemet) அமைப்பின் கூற்றுப்படி, ஸ்பெயினில் மிக வெப்பமான ஜூன் மாதமாக கருதப்பட்ட […]

சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டுக் குற்றவாளிகள் மீதான தனது நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

10 ஆண்டுகளுக்குள் மேலும் 45,000 சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த பிரித்தானியா திட்டம்

  • July 1, 2026
  • 0 Comments

சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டுக் குற்றவாளிகள் மீதான தனது நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த பத்து ஆண்டுகளில் கூடுதலாக 45,000 சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் வெளிநாட்டுக் குற்றவாளிகள் ஐக்கிய ராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தும் செயல்முறையை வேகமாகவும் திறமையாகவும் மாற்றுவதற்காக, அரசாங்கம் குடிவரவு அகற்றும் மையங்களின் கொள்ளளவை கணிசமாக விரிவுபடுத்துகிறது. நாடு கடத்தலுக்காகக் காத்திருக்கும் மக்களை நீண்ட காலத்திற்கு சமூகத்தில் சுதந்திரமாகத் தடுத்து […]

ஸ்​ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய T20 கிரிக்​கெட் அணி கடந்த வாரம் அயர்​லாந்​தில் அந்த அணிக்கு எதி​ராக நடை​பெற்ற இருதரப்பு T 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்​திருந்​தது. செய்தி விளையாட்டு

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதல்

  • July 1, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டி இன்று(01) நடைபெறவுள்ளது. ரிவர்​சைடு Riverside Stadium மைதானத்​தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ஸ்​ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய T20 கிரிக்​கெட் அணி கடந்த வாரம் அயர்​லாந்​தில் அந்த அணிக்கு எதி​ராக நடை​பெற்ற இருதரப்பு T 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்​திருந்​தது. அயர்​லாந்து சுற்​றுப்​பயணம் முடிவடைந்த நிலை​யில் 5T 20 போட்​டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்​காக […]