உலகம்

நைஜீரியாவில் கிராமமொன்றை சுற்றிவளைத்த ஆயுததாரிகள் – 30 பேர் படுகொலை

நைஜீரியாவின் கடூனா மாநிலத்தில் இன்று அதிகாலை ஆயுததாரிகள் கிராமமொன்றை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில், குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிராமத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள் அங்கிருந்த மக்களை கண்மூடித் தனமாக சுட்டும், தாக்கியும் கொலை செய்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 08 குழந்தைகளும் அடங்குவதாக கிராமத் தலைவரின் செயலாளர் டோகன் ராணா (Dogon Rana) கூறினார்.

நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் வட-மத்தியப் பகுதிகளில் ஆயுதக் கும்பல்கள் மற்றும் பிற குற்றக் குழுக்களின் வன்முறை ஒரு பெரிய பாதுகாப்புச் சவாலாக மாறியுள்ளது.

கடூனா மாநிலத்தில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்