ஆங்கிலக் கால்வாயில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகோடிக்கு சிறை தண்டனை
ஆங்கிலக் கால்வாயைக் கடக்க 95 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகின் ஓட்டுனருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஓமர் ஹெய்தாரி (Omar Heidari) என்ற நபருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது அதிக எண்ணிக்கையிலான உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி கேன்டர்பரி கிரவுன் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. இந்த வழக்குடன் சேர்த்து புதிய சட்டத்தின் கீழ் இதுவரை 10 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.
ஆங்கிலக் கால்வாயை சட்டவிரோதமாகக் கடந்த 04 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நீதிமன்றம் மேற்படி தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




