ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

பிரித்தானியப் பெண் கொலை வழக்கு: ஆஸ்திரேலிய சிறுவனின் தண்டனை குறைப்பு ரத்து

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பிரித்தானியப் பெண் ஒருவரைக் குத்திக் கொன்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறைப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பிரித்தானியப் பெண் ஒருவரைக் குத்திக் கொன்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறைப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று (Boxing Day), பிரிஸ்பேனில் , எம்மா லவல்க்கு Emma Lovell (41) சொந்தமான வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இரு ஊடுருவல்காரர்களை அவர் தடுத்து நிறுத்தியபோது, கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

பிரித்தானியாவில் Suffolk பகுதியைச் சேர்ந்த இவர், 2011-இல் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்து தனது கணவர் மற்றும் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு, இக்கொலைச் சம்பவத்தின் போது 17 வயதாக இருந்த சிறுவனுக்கு (சட்டப்படி பெயர் வெளியிடப்படவில்லை) 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அதில் 70% தண்டனைக் காலத்தைக் கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அந்தத் தண்டனைக் காலம் 60%-ஆகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை தீர்ப்பளித்த ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தண்டனைக் குறைப்பு முடிவை ரத்து செய்ததுடன், ஆரம்பக்கட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி