நேபாளத்திற்கு மற்றொரு சுற்று உதவி – காத்மாண்டு பறந்த இந்திய விமானங்கள்
நேபாளத்திற்கு, மற்றொரு தொகுதி மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 21.5 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த இந்திய விமானப்படையின் 6 மற்றும் 7-வது சிறப்பு விமானங்கள் ஏற்கனவே காத்மாண்டு வந்தடைந்துள்ளன.
இந்த சமீபத்திய தொகுதி நிவாரணப் பொருட்களில் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடயவியல் மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் அடங்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய உதவித் தொகுதி, நேபாளத்தின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.




